Tamil Nadu: சிறுபான்மையினர் ஆணைய தலைவராக பீட்டர் அல்போன்ஸ் நியமனம்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் எம்.எல்.ஏவான பீட்டர் அல்போன்ஸ், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவராக பணியாற்றியவர்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jun 29, 2021, 04:20 PM IST
  • மாநில சிறுபான்மையினர் ஆணையம் மறுசீரமைக்கப்பட்டது
  • முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியால் உருவாக்கப்பட்ட ஆணையம் இது
  • ஆணையத்தின் தலைவராக காங்கிரஸின் பீட்டர் அல்போன்ஸ் நியமனம்
Tamil Nadu: சிறுபான்மையினர் ஆணைய தலைவராக பீட்டர் அல்போன்ஸ் நியமனம் title=

சென்னை: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் எம்.எல்.ஏவான பீட்டர் அல்போன்ஸ், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவராக பணியாற்றியவர்.

தமிழ்நாட்டில் வசிக்கும் மதம் மற்றும் மொழிவாரியாக சிறுபான்மையினத்தவராக இருக்கும் சமூகத்தினரின் நலன்களைப் பாதுகாக்க தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் அமைக்கப்பட்டது. தமிழக சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான இந்த ஆணையம் 1989 ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் நாளன்று அன்றைய முதலமைச்சர் மு. கருணாநிதியால் அமைக்கப்பட்டது.

தற்போது முதலமைச்சராக இருக்கும் திமுகவின் மு.க ஸ்டாலின் அவர்கள், மாநில சிறுபான்மையினர் ஆணையத்தை மறுசீரமைத்து, முன்னாள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் எஸ். பீட்டர் அல்போன்ஸ் அவர்களை அதன் தலைவராக நியமித்துள்ளார். இந்த நியமனம் தொடர்பாக பீட்டர் அல்போன்ஸ், தனது டிவிட்டர் மூலம் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளா.

பீட்டர் அல்போன்ஸ் கடந்த 1989 மற்றும் 1991 ல் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் தென்காசி தொகுதியிலிருந்தும், 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கடையநல்லூர் தொகுதியிலிருந்தும் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவர் தமிழக சிறுபான்மையினர் ஆணைய தலைவராக நியமிக்கப்பட்டது தொடர்பாக மாநில அரசு செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது:  

தமிழ்நாட்டில் வாழும் மதம் மற்றும் மொழிவாரியான சிறுபான்மையினரின் நலன்களைப் பேணிக் காத்திடவும், அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் , கடந்த 1989 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 13 ஆம் நாள் அன்று அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியால்  தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் அமைக்கப்பட்டது.

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம், சிறுபான்மையினரின் கல்வி, சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக செயல்பட்டு வருவதாகவும், இந்த ஆணையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திருத்தியமைத்து , அதன் தலைவராக எஸ் . பீட்டர் அல்போன்ஸை நியமித்து உத்தரவிட்டுள்ளார்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read | நீட் தேர்வில் SC தீர்ப்புக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது: உயர் நீதிமன்றம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News