புதுச்சேரியில் கொரோனா வைரஸ் பாதிப்பு 7 ஆக உயர்வு...

புதுச்சேரியில் கொரோனா வைரஸ் பாதிப்பு 7 ஆக உயர்ந்துள்ளது.

Last Updated : Apr 10, 2020, 12:13 PM IST
புதுச்சேரியில் கொரோனா வைரஸ் பாதிப்பு 7 ஆக உயர்வு... title=

கொரோனா வைரஸின் ஆபத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா வழக்குகள் நாடு முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. நோயாளிகளின் எண்ணிக்கை 6 ஆயிரம் 412 ஐ தாண்டியுள்ளது, இதுவரை 199 பேர் இறந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 678 புதிய வழக்குகள் மற்றும் 33 இறப்புகள் உள்ளன. 

இதற்கிடையில் புதுவை அரியாங்குப்பம் சொர்ணா நகரில் 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால் அப்பகுதியில் சீல் வைக்கப்பட்டது. இந்த பகுதியில் தொடர்ந்து 10 நாட்களாக இந்த நடைமுறை செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் புதுச்சேரியில் நேற்றுவரை 5 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது. இன்று 2 பேருக்கு கொரோனா  பாதிப்பு உறுதியானது. அவர்கள் 2 பேரும் டெல்லி நிஜாமுதீனில் நடந்த தப்லிக் மாநாட்டில் கலந்து கொண்டு திரும்பியவர்கள் என தெரிய வந்துள்ளது. இதனால் புதுச்சேரியில் கொரோனா  பாதிப்பு இன்று 7 ஆக உயர்ந்து உள்ளது.

Trending News