இரட்டை இலை விவகாரம்: சின்னத்தைத் தேர்வு செய்ய வேண்டும்- தேர்தல் ஆணையம்

Last Updated : Mar 23, 2017, 09:04 AM IST
இரட்டை இலை விவகாரம்: சின்னத்தைத் தேர்வு செய்ய வேண்டும்- தேர்தல் ஆணையம் title=

காலை 10 மணிக்குள்ளாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரும், சசிகலா தரப்பினரும் தங்களுக்கான சின்னங்களைத் தேர்வு செய்து, பெயரையும் கொடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிறது.

ஆர்கேநகர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக-வின் இரு அணிகளில் யாருக்கும் இரட்டை இலை சின்னம் கிடையாது என்றும், அந்த சின்னம் முடக்கப்படுவதாகவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் ஆர்.கே.நகர் தொகுதி காலியானது. அதற்கு வருகிற ஏப்ரல் 12-ம் தேதியன்று தேர்தல் நடைபெறவுள்ளது. 

இதில் அதிமுக-வில் சசிகலா அணியில் தினகரனும், பன்னீர்செல்வம் அணியில் மதுசூதனனும் போட்டியிடுகின்றனர். கட்சியின் சின்னமான இரட்டை இலை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என இரு தரப்பினரும், டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்தில் முறையிட்டனர். 

சசிகலா அணி மற்றும் பன்னீர்செல்வம் அணி ஆகியோரின் தரப்பு வாதங்கள் நடந்து நிறைவடைந்தன. இரட்டை இலை சின்னத்தை யாருக்கு ஒதுக்குவது என்பது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் நஜிம் ஜைதி ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து நஜிம் ஜைதி நேற்று இரவு தனது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். அதில், இரட்டை இலை யாருக்கும் இல்லை என அறிவித்து அச்சின்னத்தை முடக்கி வைத்து உத்தரவிட்டார். இதனால் இரு தரப்புக்கும் இரட்டை இலை இல்லை என்றாகிவிட்டது.

இந்நிலையில் இரட்டை இலை சின்னத்தையும், கட்சியின் பெயரையும் இடைத்தேர்தலில் யாரும் பயன்படுத்தக்கூடாது என்பதன் காரணமாக, காலை 10 மணிக்குள்ளாக இருவரும் தங்களுக்கான சின்னங்களைத் தேர்வு செய்து, பெயரையும் கொடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிறது.

Trending News