சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபடலாம் - தமிழக அரசு அனுமதி

சிதம்பரம் நடராஜர் திருக்கோவிலில் கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட தமிழக அரசு அனுமதி   

Written by - நவீன் டேரியஸ் | Last Updated : May 19, 2022, 01:12 PM IST
  • சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீதேறி வழிபடும் விவகாரம்
  • இந்து அறநிலையத்துறை ஆய்வு செய்து அறிக்கை
  • கனகசபை மீதேறி வழிபட பக்தர்களுக்கு தமிழக அரசு அனுமதி
சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபடலாம் - தமிழக அரசு அனுமதி title=

சிதம்பரம், அருள்மிகு நடராஜர் திருக்கோயில் பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலமாக விளங்கி வருவதால் உலகெங்கிலும் இருந்து பக்தர்கள் பெருமளவில் வருகை புரிகின்றனர். இத்திருக்கோயிலில் மூலவரே உற்சவராக எழுந்தருள்வது சிறப்பம்சமாகும். அருள்மிகு சபாநாயகர் வீற்றிருக்கும் கனகசபை மண்டபத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு சிதம்பர இரகசியத்தை தரிசிப்பது நடைமுறையில் இருந்து வந்துது. கொரோனா பெருந்தொற்றுக் காரணமாக திருக்கோயில்களில் பக்தர்களை அனுமதிப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. 

மேலும் படிக்க | ‘கூத்தாண்டவர் கோவில் திருவிழா’ - சிறப்பாக நடத்திமுடிக்க ஆலோசனை

சிதம்பரம் நடராஜர் கோவிலில் பக்தர்களிடமிருந்து பூஜை பொருட்களை பெறுதல், அமர்ந்து தரிசனம் செய்தல் மற்றும் அங்கபிரதட்சனம் செய்தல் ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா தொற்று பெருமளவு குறைந்துள்ளதால் வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு விதிக்கப்பட்ட தடைகள் விலக்கப்பட்டு வருகிறது. அனைத்து திருக்கோயில்களிலும் ஏற்கனவே இருந்த வழிபாட்டு நடைமுறைகள் மீண்டும் நடைமுறைக்கு வந்தன. 

இந்நிலையில், சிதம்பரம் கோயிலை நிர்வகித்து வரும் தீட்சிதர்கள் கனகசபை மண்டபத்தின் மீது ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றி இருந்தனர். இதனால் பக்தர்கள் விரக்தியடைந்தனர். தீட்சிதர்களின் இந்த தீர்மானத்திற்கு பக்தர்கள் தரப்பில் பெரும் ஆட்சேபனைகளும் தெரிவிக்கப்பட்டு வந்தது. 
இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மற்றும் கடலூர் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஆகியோரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 

அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையில், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி ஆகம விதிகளைப் பின்பற்றி பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் அறிக்கையினை பரிசீலனை செய்து, நடராஜர் திருக்கோயிலில் தொன்றுதொட்டு நடைமுறையில் இருந்து வந்த பழக்கத்துக்கும் மதிப்பளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில்,  பக்தர்களின் கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டும் அருள்மிகு நடராஜர் திருக்கோயிலில் கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபடவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

மேலும் படிக்க | தஞ்சை பெரிய கோவில் தேர் திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News