தகாத உறவை கைவிட சொன்ன இரண்டாவது காதலனை அடித்து கொலை செய்த பெண்..!

தருமபுரி அருகே கள்ளக்காதலை கைவிட சொன்ன முதல் கள்ளக்காதலனை அடித்து கொலை செய்து சாலையோரம் வீசிய பெண் போலீசில் பிடிபட்ட சம்பவத்தின் முழு பின்னணி...

Written by - Gowtham Natarajan | Last Updated : May 15, 2022, 02:11 PM IST
  • தகாத உறவால் அரங்கேறிய கொடூரம்
  • இரும்பு கம்பியால் அடித்து கொலை
  • கள்ளக்காதலனோடு கைது செய்யப்பட்ட பெண்
தகாத உறவை கைவிட சொன்ன இரண்டாவது காதலனை அடித்து கொலை செய்த பெண்..! title=

தருமபுரி அடுத்த சவூளுர் அருகே தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் ஓரம் ஏப்ரல் 9-ம் தேதி அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடந்தது. இதுகுறித்து தகவலறிந்த தருமபுரி நகர காவல்துறையினர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இறந்து கிடந்தவர் குறித்த விவரங்களை விசாரிக்கத் தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில், சடலமாக கிடந்தவர் நல்லம்பள்ளி அடுத்த பூகனஹள்ளியை சேர்ந்த மாது(45) என்பது தெரியவந்தது. மாது கடந்த 10 ஆண்டுகளாக தருமபுரியில் மைக் செட் ஆப்ரேட்டராக பணியாற்றி வந்துள்ளார். அப்பொழுது மாதுக்கும், சத்யாநகரை சேர்ந்த தனியார் பள்ளி சமையலராக பணியாற்றி வந்த சித்ரா(40) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளாக கள்ளக்காதல் இருந்து வந்ததுள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் சித்ராவுக்கும், அவர் பணியாற்றி வரும் பள்ளியில் பேருந்து ஓட்டுநராக இருந்த கிருஷ்ணன்(41) என்பவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.

அடித்து கொலை, சவூளுர் , தேசிய நெடுஞ்சாலை, மேம்பாலம், தருமபுரி, Crime,Murder,Dharmapuri,Illegal relationship,dharmapuri murder

இச்சம்பவம் முதல் கள்ளக் காதலனான மாதுவுக்கு தெரிந்துள்ளது. இதனால், சித்ராவுக்கும், மாதுவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு ஓட்டுநருடன் உள்ள கள்ளக்காதலை கைவிடுமாறு தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து கிருஷ்ணனிடம் சித்ரா பிரச்சினையை தெரிவித்துள்ளார். இதில், சித்ராவும் இரண்டாவது கள்ளக்காதலன் கிருஷ்ணனும் மாதுவை கொலை செய்யத் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த 9 தேதி இரவு வழக்கம் போல் மாது சித்ராவின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்பொழுது மாதுவுக்கு தெரியாமல் சித்ரா கிருஷ்ணனை தொடர்பு கொண்டு வரவழைத்துள்ளார்.  

அடித்து கொலை, சவூளுர் , தேசிய நெடுஞ்சாலை, மேம்பாலம், தருமபுரி, Crime,Murder,Dharmapuri,Illegal relationship,dharmapuri murder

அப்பொழுது கிருஷ்ணன் அவர் பணியாற்றும் பள்ளிக்கு சென்று பள்ளி பேருந்திலிருந்த இரும்பு கம்பியை எடுத்து சட்டையின் பின்புறம் முதுகில் மறைத்து வைத்து கொண்டு சித்ராவின் வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டில் வைத்து மாதுவிற்க்கும் சித்ரா இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்பொழுது அங்கு வந்த கிருஷ்ணன் இரும்பு கம்பியால் மாதுவின் பின் பக்க தலையில் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த மாது இரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து இறந்த மாதுவின் உடலை சித்ராவின் இருசக்கர வாகனத்தில் வைத்து இருவரும் எடுத்து சென்று தருமபுரி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சவூளுர் மேம்பாலம் அருகே வீசி விட்டு தப்பியோடினர்.

Crime,Murder,Dharmapuri,Illegal relationship,இரண்டாவது கள்ளக் காதலை கைவிட சொன்ன முதல் கள்ளக்காதலனை அடித்து கொலை

மேலும் படிக்க | 30 ஆண்டுகளாக ஆண் வேடமிட்டு வாழும் பெண்ணின் நெகிழ வைக்கும் கதை..!

இதனையடுத்து சித்ரா மற்றும் கிருஷ்ணன் இருவரையும் தருமபுரி நகர காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் கொலை செய்ய பயன்படுத்திய இரும்பு கம்பி இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். விசாரணைக்கு பிறகு இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். தருமபுரி அருகே இரண்டாவது கள்ளக் காதலை கைவிட சொன்ன முதல் கள்ளக்காதலனை அடித்து கொலை செய்து சாலையோரம் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | கோவையில் மாயமான 13 வயது மாணவியை இன்ஸ்டாகிராம் மூலம் மீட்ட போலீசார்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, (https://www.facebook.com/ZeeTamilNews/) ட்விட்டரில் @ZeeTamilNews (https://twitter.com/ZeeTamilNews) மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews (https://t.me/ZeeTamilNew) என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News