தர்மபுரி மாணவி விவகாரம்: விசாரணை அதிகாரி மாற்றம்...

தருமபுரியில் பாலியல் வன்கொடுமையில் +2 பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவத்தில் விசாரணை அதிகாரி மாற்றம்...

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 12, 2018, 12:13 PM IST
தர்மபுரி மாணவி விவகாரம்: விசாரணை அதிகாரி மாற்றம்... title=

தருமபுரியில் பாலியல் வன்கொடுமையில் +2 பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவத்தில் விசாரணை அதிகாரி மாற்றம்...

தருமபுரி மாவட்டத்தில் உள்ள மலைக்கிராமத்தை சேர்ந்த மாணவி அருகில் உள்ள அரசுப்பள்ளி ஒன்றில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த 5 ஆம் தேதி அருகில் உள்ள காட்டுப் பகுதிக்குச் மாணவியை பின்தொடர்ந்து அதே ஊரைச் சேர்ந்த சதீஷ், ரமேஷ் ஆகியோர் மாணவியை பின்தொடர்ந்து சென்றதாகக் கூறப்படுகிறது.

மாணவிக்கு சகோதரன் முறை கொண்ட இருவரும் அவரை அருகில் உள்ள ஓடைக்கரைக்கு தூக்கிச் சென்று மாணவியின் வாயில் துணியை வைத்து அடைத்த இருவரும் அவரை வன்கொடுமை செய்துள்ளனர். இதையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவியை சிகிச்சைகாக அனுமதித்துள்ளனர். அனால், சிகிச்சைப்பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து, இந்த சம்பவத்தை தொடர்ந்து கிராமமக்கள் கண்டனம் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், மாணவி விவகாரத்தில் விசாரணை நடத்தி வந்த கோட்டப்பட்டி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மாற்றப்பட்டு, அரூர் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் லட்சுமி புதிய விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  

 

Trending News