நாகை மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு!

நாகை மண்டல பள்ளிகளுக்கு நாளையும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்!

Last Updated : Nov 21, 2018, 05:06 PM IST
நாகை மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு! title=

நாகை மண்டல பள்ளிகளுக்கு நாளையும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்!

தமிழகத்தை புரட்டியெடுத்த கஜா புயல் பாதிப்பில் இருந்து தமிழகம் படிப்படியாக மீண்டு வருகின்றது. கஜா புயலால் பெரிதும் பாதிக்கப்படுள்ள நாகை, புதுக்கோட்டை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பேரழிவு ஏற்பட்டுள்ளது. புயலின்போது சாய்ந்து விழுந்த மரங்களை அகற்றுவது, புதிய மின்கம்பங்கள் நடுவது போன்ற பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்ததாலும், பள்ளிக்கூடங்களில் சாய்ந்து கிடக்கும் மரங்கள் அகற்றப்படாததாலும் கல்வி நிறுவனங்களுக்கு மாவட்ட நிர்வாகங்கள் விடுமுறை அறிவித்திருந்தன. இந்நிலையில் அம்மாவட்டங்களில் ஓரளவுக்கு சீரமைப்பு பணிகள் நடைபெற்ற நிலையில், நாளை முதல் பள்ளிகள் செயல்படும் என அமைச்சர் செங்கோட்டையன் இன்று காலை தெரிவித்தார்.

ஆனால் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்த மழை பொழிந்து வருவதால் நாளை நாகை மண்டலத்திற்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Trending News