கருணாநிதி நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் மலர்தூவி மரியாதை...

திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்ட நிலையில், கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

Last Updated : Jul 4, 2019, 10:34 PM IST
கருணாநிதி நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் மலர்தூவி மரியாதை... title=

திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்ட நிலையில், கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில், திமுக தலைவர் ஸ்டாலின், துரைமுருகன், பொன்முடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அதனைதொடர்ந்து  திமுக இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்ட உதயநிதி ஸ்டாலினும் மரியாதை செலுத்தினார்.

திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டதாக இன்று திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிக்கை வெளியிட்டார். இந்த அறவிப்பிற்கு பின்னர் கட்சி தொண்டர்கள் சார்பில் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இதற்கிடையில் தனது நியமன அறிவிப்பிற்கு பின்னர் சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் உதயநிதி மரியாதை செலுத்தியுள்ளார்.

திமுக-வின் அதிகாரமிக்க பதவிகளில் ஒன்றாகக் கருதப்படுவது இளைஞர் அணிச் செயலாளர் பதவி, திமுக தலைவராக கருணாநிதி இருந்தபோது அவருடைய மகன் ஸ்டாலினின் அரசியல் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்டது. சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த அணியின் செயலாளர் பொறுப்பிலிருந்த ஸ்டாலின், திமுக-வின் பொருளாளர் பதவிக்கு வந்தபோதே தான் உருவாக்கிய இளைஞரணி பதவியை விட்டுக்கொடுத்தார். 

அதற்குபின்னர் அந்தப் பதவியில் வெள்ளக்கோவில் சுவாமிநாதன் இருந்தார். இந்நிலையில் கருணாநிதி மறைவுக்குப் பிறகு ஸ்டாலின் திமுக தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து அவருடைய வாரிசான உதயநிதி திமுக கூட்டங்களில் பங்கேற்க ஆரம்பித்தார்.

திமுக மூத்த நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்களிடம் உதயநிதிக்கு முக்கியத்துவம் அளிக்க வாய்மொழியாக வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தலின்போது தமிழகம் முழுவதும் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அவருடை பிரசாரத்துக்கு நல்ல வரவேற்ப்பு இருந்ததாக கட்சிக்குள் கூறப்படுகிறது. 

இதன் பின்னர் உதயநிதிக்கு கட்சிப் பதவி வழங்க வேண்டும் என்ற பேச்சு கட்சிக்குள் ஒலிக்க ஆரம்பித்தது.  எனினும் கட்சியில் பதவியை நாடி நான் உழைக்கவில்லை என உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து தெரிவித்து வந்தார். எனினும் தற்போது உதயநிதி ஸ்டாலின் திமுக இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே முரசொலி நிர்வாக மேலாண்மை இயக்குநராக பொறுப்பு வகித்து வரும், உதயநிதி ஸ்டாலின் தற்போது, இளைஞர் அணிச் செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Trending News