வனத்துறைக்கு போக்கு காட்டும் பெண்ணை கொன்ற காட்டு யானை; பீதியில் மக்கள்

நீலகிரியில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் காட்டு யானையை பிடிக்கும் பணியை தீவிரப்படுத்தியுள்ளது வனத்துறை.     

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 1, 2022, 04:59 PM IST
  • போக்கு காட்டும் காட்டு யானை
  • நீலகிரி மக்கள் மத்தியில் பீதி
  • ட்ரோன் மூலம் கண்காணிக்கும் வனத்துறை
வனத்துறைக்கு போக்கு காட்டும் பெண்ணை கொன்ற காட்டு யானை; பீதியில் மக்கள்  title=

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தேவாலா பகுதியில் PM2 மக்னா யானை பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. கடந்த 19 ஆம் தேதி நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே தேவாலா வாழவையல் பகுதியில் குடியிருப்பை சேதப்படுத்திய அந்த யானை பாப்பாத்தி என்ற பெண்மணியை தாக்கிக் கொன்றது. இச்சம்பவத்தையடுத்து உடனடியாக யானையை பிடிக்க வேண்டும் என கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க | சூறாவளிக்காற்று வீசும் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

மக்களின் போராட்டத்துக்குப் பிறகு யானை பிடிக்க உத்தரவிடப்பட்டது. கடந்த 21 ஆம் தேதி யானையை பிடிப்பதற்கான பணியை வனத்துறையினர் தொடங்கினர். அப்போது, அந்த யானை கேரள மாநில எல்லையோரத்திற்குச் சென்றது. மீண்டும் அந்த PM2 மக்னா யானை தேவாலா பகுதிக்கு வரும் வரை வனத்துறையினர் காத்திருந்தனர். நேற்று முன்தினம் மீண்டும் அந்த யானை தேவாலா பகுதிக்கு வந்தது.

இதனையடுத்து அதனைப் பிடிப்பதற்கான நடவடிக்கையை கூடலூர் வனத்துறையினர் மேற்கொண்டனர். அந்த நேரத்தில் புளியம்பாறை அடுத்துள்ள கோழிக்கொல்லி ஆதிவாசி கிராமத்தை ஒட்டி யானை இடம்பெயர்ந்தது. யானையின் நடமாட்டத்தை வனத்துறையினர் ட்ரோன் கேமரா மூலம் தொடர்ந்து கண்காணித்தனர். பின்னர், மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் யானை மலை சரிவில் இருந்ததால் அதனை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதனையடுத்து, அந்த யானையை மயக்க ஊசி செலுத்தி கும்கி யானைகள் மூலம் எளிதில் பிடித்து லாரியில் ஏற்ற வசதியான இடத்திற்கு வரும்வரை காத்திருந்து பிடிக்க வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். இதனிடையே புளியம்பாறை, கோழிக்கொல்லி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கிராம மக்கள் இரவு நேரங்களில் தேவையின்றி வெளியில் வர வேண்டாம் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க | கூவம் ஆற்றில் ஆண் சடலம் - சென்னையில் பரபரப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News