ஆகஸ்ட் 16-ம் தேதி தொடங்குகிறது பொறியியல் கலந்தாய்வு - அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 16-ம் தேதி தொடங்கி நடைபெறும் என உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். 

Written by - Arunachalam Parthiban | Last Updated : Jun 8, 2022, 02:42 PM IST
  • பொறியியல் கலந்தாய்வு ஆக்ஸ்ட் 16-ம் தேதி தொடக்கம்
  • நீட் தேர்வு முடிவுகள் வெளியான பின்னரே அட்மிஷன்
  • உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
ஆகஸ்ட் 16-ம் தேதி தொடங்குகிறது பொறியியல் கலந்தாய்வு - அமைச்சர் பொன்முடி அறிவிப்பு title=

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக ஆன்லைன் வழியாக மட்டுமே பொதுத்தேர்வு நடத்தப்பட்ட நிலையில் நடப்பாண்டில் +2 மாணவர்களுக்கு நேரடியாக பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் விரைவில் வெளியாக உள்ள நிலையில் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தேதியை உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். 

சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர் பேசியதாவது:- 

பொறியியல் கல்லூரிகளில் நடப்பாண்டு எந்த வகையில் மாணவர் சேர்க்கையை நடத்துவது என்பது தொடர்பாக ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவு, குறிப்பிட்ட காலத்தில் இடம் கிடைக்காத சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் கலந்தாலோசிக்கப்பட்டது. அண்ணா பல்கலைக்கழகத்தில் மட்டும் கடந்த ஆண்டு 631 இடங்கள் காலியாக இருந்தன. அதற்கு முந்தைய ஆண்டு 750 இடங்கள் காலியாக இருந்தன. இதற்கு முக்கிய காரணம் மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகங்களில் சேர்ந்த பின்னர் நீட் தேர்வு மூலம் மருத்துவக்கல்லூரி உள்ளிட்ட பிற கல்லூரிகளில் இடம் கிடைத்ததும் அங்கு சேர்ந்துவிடுவது தான். 

இதனால் பொறியியல் கல்லூரிகளில் அதிக அளவு காலி இடங்கள் ஏற்பட்டு விடுகின்றன. எனவே, இதனை தடுக்கும் முயற்சியாக நடப்பாண்டு நீட் தேர்வு முடிவுகள் வெளியான பின்னரே பொறியியல் கல்லூரிகளில் அட்மிஷன் தொடங்கப்படும். 

மேலும் படிக்க | FreeFire ID, Password-ஐ திருடிய நண்பர்கள் - WhatsAppல் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு இளைஞர் தற்கொலை!

இதனடிப்படையில் நடப்பாண்டு பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு வரும் ஆகஸ்ட் 16ம் தேதி தொடங்குகிறது. பொதுப்பிரிவினருக்கு ஆகஸ்ட் 22ம் தேதி தொடங்குகிறது. பொறியியல் கட்டணத்தில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை என்பதால் கடந்த ஆண்டு வசூலித்த கட்டணமே வசூலிக்கப்படும். பொறியியல் கலந்தாய்விற்கு மாணவர்கள் ஜூன் 20-ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க ஜூலை 19ஆம் தேதி கடைசி நாள். இந்த விண்ணப்பத்தை சொந்தமாகவும் விண்ணப்பிக்கலாம். அல்லது அவரவர் படிக்கும் பள்ளிகள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். இது தவிர தமிழகம் முழுவதும் மொத்தம் 110 இடங்களிலும் விண்ணப்பிக்க வசதிகள் ஏற்படுத்தப்படும். 

ஆகஸ்டு 16ம் தேதி முதல் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்கள், விளையாட்டு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும். இதைத்தொடர்ந்து ஆகஸ்ட் 22-ம் தேதி முதல் நவம்பர் 14-ம் தேதி வரை பொதுப்பிரிவு மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீடு கலந்தாய்வு நடைபெறும். இதில் துணை கலந்தாய்வு 15.10.22, 16.10.22 நடைபெறும். எஸ்.சி. கலந்தாய்வு 17, 18 ஆகிய 2 நாட்கள் நடைபெறும். 18-ந்தேதியுடன் அட்மிஷன் முடிந்து விடும். இதில் முதல் 15,000 பேருக்கு ஒரு வாரத்தில் கலந்தாய்வு நடைபெறும்.

இந்த ஒரு வாரத்திற்குள் மாணவர்கள் பணம் செலுத்த வேண்டும். அப்படி செலுத்தப்படவில்லை என்றால் அவர்களின் விண்ணப்பங்கள் ரத்து செய்யப்பட்டு அடுத்த மாணவருக்கு அந்த இட வாய்ப்பு வழங்கப்படும். தனியார் அல்லது அரசு பொறியியல் கல்லூரி என எந்த கல்லூரியாக இருந்தாலும் இரு வாரத்தில் பணம் கட்ட வேண்டும். 

இவ்வாறு அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். 

மேலும் படிக்க | 'விக்ரம்' மெகா ஹிட் எதிரொலி - 6 ஆண்டுகளுக்கு பின் மீண்டு வருகிறார் 'சபாஷ் நாயுடு'!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News