பக்கத்து வீட்டில் சிறுநீர் கழித்த டாக்டர்: மீண்டும் சர்ச்சையில் சிக்கினார்!

கைது செய்யப்பட்டவர்களை சந்தித்த விவகாரத்தில் டாக்டர். சுப்பையா சண்முகம் ஒழுங்கு நடவடிக்கையாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 17, 2022, 05:32 PM IST
  • மாணவி மரணத்திற்கு ஏபிவிபி தொடர் போராட்டம்.
  • மருத்துவர் சுப்பையா பணியிட நீக்கம்.
  • ஏபிவிபி அமைப்பினர் ஆளுநரை சந்தித்து மனு
பக்கத்து வீட்டில் சிறுநீர் கழித்த டாக்டர்: மீண்டும் சர்ச்சையில் சிக்கினார்!  title=

முதல்வர் வீட்டை முற்றுகையிட்டு கைது செய்யப்பட்டு புழல் சிறையில் உள்ள ஏபிவிபி அமைப்பினரை சந்தித்த விவகாரத்தில், ராயப்பேட்டை அரசு புற்றுநோய் மருத்துவமனையின் துறை தலைவர் டாக்டர். சுப்பையா சண்முகம் ஒழுங்கு நடவடிக்கையாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.  அரியலூரைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி மைக்கேல்பட்டியில் உள்ள பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த மாணவி சில வாரங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். ஆரம்பம் முதலே மாணவியின் மரணத்திற்கு மதமாற்றம் செய்ய கட்டாயப்படுத்தியதுதான்  காரணம் என கூறி மரணத்திற்கு நீதிக்கேட்டு பாஜக மற்றும் இந்து அமைப்புக்கள் தொடர்ந்து  பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. 

மேலும் படிக்க | மாணவி லாவண்யா விவகாரத்தில் மதமாற்ற குற்றச்சாட்டை மறுக்கும் பள்ளி நிர்வாகம்

இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மாணவியின் தந்தை முருகானந்தம் இந்த மரணம் தொடர்பாக வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மாணவியின் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது. இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட மாணவி லாவண்யாவின் மரணத்திற்கு நீதி கேட்டு முதலமைச்சர் ஸ்டாலின் வீடு அமைத்திருக்கும் சென்னை தேனாம்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் தடையை மீறி நுழைந்த ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் அமைப்பான ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர். பாஜக மாணவர் அமைப்பின் தேசிய செயலாளர் நிதி திரிபாதி உட்பட போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்தது காவல்துறை.  பின்பு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்ட போலீசார் சைதாப்பேட்டை 18 வது குற்றவியல் நீதிபதி சுப்பிரமணியன் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் ஆஜர்படுத்தினர். கைது செய்யப்பட்ட 32 பேரில் 3 சிறார்களைத் தவிர 29 பேறையும் வருகின்ற 28ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி சுப்பிரமணியன் உத்தரவுவிட்டார். 

மேலும் படிக்க | பள்ளி சிறுமி தற்கொலை; கட்டாய மத மாற்றம் காரணமா? போலீஸ் விசாரணை!

இந்நிலையில் இவர்களை சந்தித்த டாக்டர். சுப்பையா சண்முகம் தற்போது ஒழுங்கு நடவடிக்கையாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.  மேலும், ABVP தென்பாரத அமைப்பு செயலாளர் ஆர்.குமரேஷ், அகில பாரத அமைப்பு செயலாளர் ஆஷிஷ் சௌகான், அகில பாரத இணை அமைப்பு செயலாளர் பால கிருஷ்ணன் ஆகியோர் கைது செய்தவர்களை விடுவிக்க கோரி இன்று தமிழக ஆளுனர்-ஐ சந்தித்து மனு கொடுத்தனர்.

மேலும் படிக்க | போராடினால் ஜெயிலா? அதிர்ந்த ஏபிவிபி! மிரட்டிய போலீஸ்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News