INX வழக்கு: ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு!

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ஜாமீன் கேட்டு திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு!!

Last Updated : Oct 3, 2019, 12:18 PM IST
INX வழக்கு: ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு! title=

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ஜாமீன் கேட்டு திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு!!

கடந்த 2007-இல் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெறுவதற்கு, மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் முறைகேடாக அனுமதி வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதில், ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு ப.சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை தொகுதி எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடா்பாக, சிபிஐ கடந்த 2017-ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது. அதனடிப்படையில், சட்டவிரோத பணப்பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையும் கடந்த 2018-இல் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வரும் சிபிஐ, ப.சிதம்பரத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் 21 ஆம் தேதி சிபிஐ கைது செய்தது. பின்னா், அவரை காவலில் எடுத்து, சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினா். இதைத்தொடா்ந்து, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்ட அவா், தில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதை தொடர்ந்து ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் ஜாமீன் கொடுக்க மறுப்பு தெரிவித்தது. இந்நிலையில், சிறையில் உள்ள ப.சிதம்பரம் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கும்படி சிதம்பரத்தின் வழக்கறிஞர் கபில் சிபல் கேட்டுக்கொண்டார். 

 

Trending News