வீட்டின் ஓட்டை துளைத்த துப்பாக்கிக் குண்டு - மீண்டும் கவனக்குறைவா?

ஆவடி அருகே வீட்டின் ஓட்டை துப்பாக்கிக் குண்டு துளைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 29, 2022, 03:20 PM IST
  • ஆவடியில் மீண்டும் அலட்சியம்
  • வீட்டிற்குள் புகுந்த துப்பாக்கிக் குண்டு
  • காவல்துறை தீவிர விசாரணை
வீட்டின் ஓட்டை துளைத்த துப்பாக்கிக் குண்டு - மீண்டும் கவனக்குறைவா? title=

ஆவடி அடுத்த மிட்டனமல்லி ராஜா தெருவை சேர்ந்தவர் ராஜேஷ் குமார். பெயின்டர் வேலை செய்து வருகிறார். நேற்று இரவு பணி முடித்து திரும்பிய அவர், வீட்டில் உறங்கியுள்ளார். பின்னர் காலையில் எழுந்து பார்த்தபோது பீரோ கண்ணாடி உடைந்திருந்துள்ளது. என்னவென்று பார்த்தபோது, அவர்  வீட்டின் மேற்கூரையிலும் துளை இருந்துள்ளது. அதிர்ச்சியடைந்த ராஜேஷ்குமார் வீட்டில் தேடிப் பார்த்தபோது துப்பாகிக் குண்டு இருந்துள்ளது. உடனடியாக அது குறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துள்ளார். முத்தாப்பேட்டை காவல் ஆய்வாளர் ராஜி தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று நேரில் ஆய்வு செய்தனர்.

மேலும் படிக்க | கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு...ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனிடம் விசாரணை

வீட்டின் மேற்கூரையில் துளை இருப்பதையும், பீரோ கண்ணாடி உடைந்திருப்பதையும் பார்த்த அவர்கள், ராஜேஷ்குமாரிடம் இருந்து துப்பாக்கிக் குண்டை பெற்று விசாரணையை தொடங்கியுள்ளனர். அவரது வீட்டிற்கு அருகாமையில் சிஆர்பிஎப் பயிற்சி வளாகம், இந்திய விமானப்படை வளாகம் உள்ளது. அங்கு பயிற்சி பெறும்போது, தவறுதலாக துப்பாகிக் குண்டு ராஜேஷ்குமார் வீட்டை துளைத்தா? என்றும் காவல்துறையினர் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். இந்த ஆண்டு தொடக்கத்தில் புதுக்கோட்டை மாவட்டம், கந்தவர்க்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நார்த்தாமலையில் சிறுவன் ஒருவர் துப்பாக்கிக் குண்டு தலையில் பாய்ந்து உயிரிழந்தார். 

தாத்தா வீட்டில் அவர் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்தது. சிறுவனின் தாத்தா வீட்டுக்கு அருகில் துப்பாக்கிச் சுடும் பயிற்சி தளம் இருக்கிறது. அங்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் உள்ளிட்டோர் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தபோது, இந்த சம்பவம் எதிர்பாராத விதமாக நிகழ்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த நிகழ்வுக்குப் பிறகு இப்படியொரு சம்பவம் நடைபெறக் கூடாது என நடிகர் விஜய் உள்ளிட்டோர் வலியுறுத்தியிருந்தனர். ஆனால், 3 மாதங்களிலேயே மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறியிருப்பது கவனக்குறைவா? அலட்சியமா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | பப்ஜி மதன் ஜாமீன் மனு தொடர்பாக சைபர் கிரைம் பிரிவு காவல்துறை பதிலளிக்க உத்தரவு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News