காதல் மனைவியை துடிக்க துடிக்க கொலை செய்த கணவன்..!

கோவையில் காதல் மனைவியை கணவனே கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Written by - Gowtham Natarajan | Last Updated : Apr 4, 2022, 10:45 AM IST
  • மனைவி மீதான சந்தேகத்தால் நேர்ந்த கொடூரம்
  • கத்தியால் குத்தி துடிதுடிக்கக் கொலை செய்த கணவன்
  • போலீசில் சிக்கியது எப்படி ? - பரபரப்பு வாக்குமூலம்..!
காதல் மனைவியை துடிக்க துடிக்க கொலை செய்த கணவன்..! title=

கோவை சுந்தராபுரம் அருகே உள்ள காமராஜர் நகரைச் சேர்ந்தவர் நாகர்ஜுனன். ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார். இவரும் இந்திரா நகரைச் சேர்ந்த ஷர்மிளா என்ற பெண்ணும் கடந்த மூன்று வருடங்களாக காதலித்து வந்தனர். இருவரின் காதல் விவகாரம் ஒருகட்டத்தில் பெண்ணின் குடும்பத்தினருக்கு தெரியவர கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. ஷர்மிளாவை வீட்டு சிறையில் வைக்க முயன்றதாக கூறப்படுக்கிறது. இந்நிலையில் வீட்டை விட்டு வெளியே ஷர்மிளா காதலன் நாகர்ஜீனனை கைபிடித்தார். நண்பர்களின் முன்னிலையில் கடந்த நவம்பரில் திருமணமும் நடந்து முடிந்தது. ஆசை காதலனுக்காக குடும்பத்தினரை உதறி தள்ளியவர் ஆயிரம் கனவுகளோடு வாழ்க்கையை தொடங்கினார். ஆனால் அது நீண்ட  நாட்களுக்கு நீடிக்கவில்லை. திருமணம் முடிந்து ஆறு மாதத்தில் கணவன் மனைவி இடையே கருத்துவேறுபாடு ஏற்படத் தொடங்கியது.

Murder

விழுந்து விழுந்து காதலித்த  நாகர்ஜுனன் திருமணத்திற்கு பிறகு தலைகீழாய் மாறிப்போனார். இதற்கிடையே இன்னொரு பிரச்சனையும் விஸ்வரூபம் எடுத்தது. கருத்து வேறுபாடோடு சேர்ந்து சந்தேக பார்வையும்  நாகர்ஜுனனை நகர்த்தியது. ஷர்மிளாவின் நடத்தையில் சந்தேகப்படத் தொடங்கியவர் அதுதொடர்பாக அடிக்கடி மனைவியிடம் சண்டை போட்டு வந்திருக்கிறது. சம்பவத்தன்று அதே தான்.. கணவன் மனைவி இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த நாகர்ஜீனன், வீட்டிலிருந்து கத்தியை கையில் எடுத்திருக்கிறார். கண்ணிமைக்கும் நேரத்தில் ஆத்திரம் தீர மனைவியை சரமாரியாகக் குத்தினார்.

சுந்தராபுரம்

மேலும் படிக்க | தங்கையின் காதலனுக்கு கத்திக்குத்து - அண்ணன் கைது..!

ரத்த வெள்ளத்தில் நிலைகுலைந்து போன ஷர்மிளா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துபோனார். இந்நிலையில் அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஷர்மிளாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், நாகர்ஜீனனை கைது செய்து விசாரித்து வருகின்றனர். குடிபோதையில் நண்பர்களிடம் உலறியவர் போலீசில் வசமாக சிக்கியிருக்கிறார். காதலனுக்காக பெற்றவர்களை தூக்கி எறிந்தவர் இன்று அதே காதல் கணவனால் காவு வாங்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க | முன்னாள் காதலியை வீடியோ எடுத்து மிரட்டிய வாலிபருக்கு செக் வைத்த போலீஸ்..!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

 

Trending News