ஜன.,8,9 அகில இந்திய ஸ்டிரைக்: அரசு ஊழியர்களை எச்சரிக்கும் TN Govt....

ஜன., 8, 9 ஆகிய நாட்களில் வேலை நிறுத்தம் செய்யும் அரசு ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு ஊழியர்களுக்கு கடும் எச்சரிக்கை....

Last Updated : Jan 6, 2019, 01:16 PM IST
ஜன.,8,9 அகில இந்திய ஸ்டிரைக்: அரசு ஊழியர்களை எச்சரிக்கும் TN Govt.... title=

தலைமைச் செயலாளர் கிரிஷா வைத்தியநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அங்கீகரிக்கப்படாத சங்கத்தின் சார்பில் ஊழியர்கள்  வேலை நிறுத்தத்தில் பங்கேற்பதாக தகவல் கிடைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். எனவே, போராட்டத்தில் பங்கேற்று அரசு நிர்வாகத்தை பாதித்தால் அது விதிமுறை மீறிய செயல் எனவும் அவர் கூறியுள்ளார். 

வேலை நிறுத்தம் அன்று விடுமுறை எடுத்தால் ஊதியம் பிடிக்கப்படும் எனவும், ஒப்பந்த பணியாளர்கள் மற்றும் இதர பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றால் பணியிலிருந்து விடுக்கப்படுவார்கள் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வேலை நிறுத்தம் அன்று பணிக்கு வந்தவர்கள், வராதவர்களின் பட்டியலை அன்றைய தினம் காலை 10.30 மணிக்குள் பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறைக்கு அனுப்ப வேண்டும் எனவும் துறை அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி அரசு நிர்வாகத்தைப் பாதித்தால் அது விதிகளை மீறிய செயல் என்றும் குறிப்பிட்டுள்ளார். விதிகளை மீறும் ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வேலை நிறுத்தம் அன்று விடுப்பு எடுத்தால் ஊதியம் பிடிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

ஒப்பந்தப் பணியாளர்களும் பிற பணியாளர்களும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றால் பணியிலிருந்து விடுவிக்கப்படுவார்கள் என்றும் எச்சரித்துள்ளார். வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நாட்களில் ஊழியர்கள் தற்செயல் விடுப்பு, மருத்துவ விடுப்பு உள்ளிட்ட எந்த விடுப்பும் எடுக்கக் கூடாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நாட்களில் பணிக்கு வந்தவர்கள், வராதவர்கள் பட்டியலைப் பணியாளர் நிர்வாகச் சீர்திருத்தத் துறைக்கு அனுப்ப வேண்டும் என்றும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் குறிப்பிட்டுள்ளார்.

 

Trending News