காதலை எதிர்த்த பெற்றோர், கம்பத்தில் கட்டி வைத்து சித்ரவதை!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, காதலனின் தாயை கம்பத்தில் கட்டி வைத்து சித்ரவதை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Last Updated : Jul 20, 2019, 04:15 PM IST
காதலை எதிர்த்த பெற்றோர், கம்பத்தில் கட்டி வைத்து சித்ரவதை! title=

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, காதலனின் தாயை கம்பத்தில் கட்டி வைத்து சித்ரவதை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே உள்ள விளாங்காட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி, இவருக்கு 25 வயதில் மகன் உள்ளார். இந்த இளைஞரும், அதே ஊரைச் சேர்ந்த கொளஞ்சி என்பவரின் மகளும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். கடந்த மாதம் கொளஞ்சி தனது மகளுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்ய அதிர்சியில் ஆழ்ந்த காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறினர்.

இதனால் இரு குடும்பத்தினர் இடையே பிரச்னை எழுந்துள்ளது. இது தொடர்பாக காதலனின் தாயார் செல்வியிடம், பெண்ணின் தந்தை கொளஞ்சி தகராறு செய்தது மட்டுமின்றி செல்வியை அங்கிருந்த மின்கம்பத்தில் கட்டி வைத்து கொடூரமாக தாக்கியுள்ளார்.

இது குறித்து தகவலறிந்த விருத்தாசலம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று செல்வியை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர்.

மேலும் செல்வி கொடுத்த புகாரின் பேரில் கொளஞ்சியை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending News