காதலியை கொலை செய்து வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்த கொடூர காதலன்!

கேரளா மாநிலத்தை சேர்ந்த காதல் ஜோடி, சென்னை குரோம்பேட்டையில் தனியார் ஓட்டலில் அறை எடுத்து தனிமையில் தங்கியிருந்துள்ளனர். 

Written by - Yuvashree | Last Updated : Dec 2, 2023, 04:51 PM IST
  • கேரளாவை சேர்ந்த காதல் ஜோடி குரோம்பேட்டையில் தங்கியிருந்துள்ளனர்.
  • வாக்குவாதம் முற்றி காதலன், காதலியை கொலை செய்துள்ளான்
  • பின்னர் அவரது புகைப்படத்தை ஸ்டேட்டஸ் ஆக வைத்துள்ளான்.
காதலியை கொலை செய்து வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்த கொடூர காதலன்! title=

சென்னை குரோம்பேட்டையில் தனியார் ஓட்டலில் அறை எடுத்து தனிமையில் இருந்த கேரளா மாநிலத்தை சேர்ந்த காதல் ஜோடி,இருவருக்கும் வாக்குவாதாம் ஏற்ப்பட்ட நிலையில் காதலியை ட்ஷிர்ட்டால் கழுத்தை நெரித்து கொலை செய்த காதலன். கொலை செய்துவிட்டு மாணவியின் புகைப்படத்தை போட்டோ எடுத்து ஸ்டேட்டஸ் வைத்த கொடூர காதலன்  போன் நம்பரை வைத்து தட்டி தூக்கிய போலீசார். 

கேரளா மாநிலம் கொல்லம் தேன்மலா பகுதியைச் சேர்ந்தவர் பவுசியா (வயது20) இவர் சென்னை குரோம்பேட்டை நியூ காலனி ஆறாவது தெருவில் உள்ள இமை மகளிர் தங்கும் விடுதியில் தங்கி குரோம்பேட்டை பாலாஜி மருத்துவ கல்லூரியில் இரண்டாம் ஆண்டு நர்சிங் படித்து வருகிறார். இந்தநிலையில் பவுசியா அவரின் சொந்த ஊரான கொல்லம் பகுதியைச் சேர்ந்த ஆஷிக்(20) என்ற இளைஞரை கடந்த ஐந்து வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.மேலும் இருவரும் அடிக்கடி வீட்டுக்கு தெரியாமல் ஹோட்டல்களில் அரை எடுத்து தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். மேலும் இருவருக்கும் அடிக்கடி பிரச்சினைகள் ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் மூன்று நாட்களாக பவுசியா கல்லூரிக்கு செல்லாமல் அறையில் விடுதியில் தங்கி இருந்து உள்ளார்.இந்த நிலையில்  இன்று சென்னை குரோம்பேட்டை பகுதியில் உள்ள FAZARI ஓட்டலில் ஆஷிக் மற்றும் பவுசியா இருவரும் அறைய எடுத்து தங்கி தனிமையில் இருந்துள்ளனர்.        அவ்வபோது ஏற்படும் பிரச்சனை போல இன்றும் பவுசியா ஆஷிக்கிடையே பிரச்சனை ஏற்பட்ட்டது  ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த ஆஷிக் தனது காதலியை  திடீரென்று தாக்கியுள்ளார். கோபம் அதிகமாக அதிகமாக இருவருக்கும் சண்டை அதிகமாகிய நிலையில் ஒரு கட்டத்தில் ஆஷிக் தான் அணிந்திருந்த சிகப்பு நிற டி-ஷர்டை எடுத்து பவுசியாவின் கழுத்தில் வைத்து இறுக்கமாக முறுக்கியுள்ளார். சம்பவ இடத்திலேயே பவுசியா துடிதுடிக்க மூச்சு திணறி இருந்துள்ளார். அதன் பின்பு ஆஷிக் தனது செல்போனில் பவுசியா இறந்த புகைப்படத்தை எடுத்து whatsapp ஸ்டேட்டஸ் வைத்துள்ளார் மாணவி பவுசியாவை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டதாக புகைப்படத்தை பார்த்த பவுசியாவின் தோழிகள் அதிர்ச்சி அடைந்து குரோம்பேட்டை பகுதியில் உள்ள புகாரி ஹோட்டலுக்கு நேரடியாக சென்று பார்த்துள்ளனர்.

மேலும் படிக்க | மிக்ஜாம் புயல்: 12 மாவட்ட அதிகாரிகளுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவு

அங்கு பவுசியா உயிரிழந்த நிலையில் இருந்தது உள்ளார் பின்னர் இது குறித்து குரோம்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பவுசியாவை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஆஷிக்கை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

போலீசார் விசாரணையில், இருவரும் 16 வயது இருக்கும்போதே காதலித்து திருமணம் செய்து கொண்டதும்.அதனால் பவுசியா கருவுற்று ஒரு குழந்தையை பெற்று அந்தக் குழந்தை கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஒரு ஆசிரமத்தில் வளர்ந்து வருகிறது, மேலும் 16 வயதில் மாணவியை திருமணம் செய்ததால் கேரள மாநில போலீசார் ஆஷிக்கை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் சிறையில் இருந்து மீண்டும் வெளியே வந்து தன் காதலி பவுசியாவை அடிக்கடி சந்தித்து ஓட்டலில் அரை எடுத்து தனிமையில் சந்தித்து வந்தோம்.

அதேபோல் இன்று குரோம்பேட்டை FAZARI ஓட்டலில் அரை எடுத்து இருவரும் தனிமையில் இருந்த நிலையில் பவுசியா தனது செல்போனை எடுத்து பார்த்த போது அதில் பல பெண்கள் உடன் தொடர்பில் இருப்பதை அறிந்து என்னுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்பொழுது ஆத்திரத்தில் தனது பனியினை கழட்டி பவுசியாவின் கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டதாகவும் ஆஷிக் வாக்குமூலம் அளித்துள்ளார். தொடர்ந்து போலீசார் ஆஷிக் மீது வழக்கு பதிவு செய்து குரோம்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் படிக்க | அதிக விலை கொடுத்து துவரம் பருப்பு வாங்குவது ஏன் - வானதி சீனிவாசன் கேள்வி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News