பசுமை வழிச்சாலை எதிர்ப்பு! மன்சூர் அலிகான் ஜாமீன் மனு தள்ளுபடி!

சென்னை-சேலம் இடையே அமைக்கப்பட உள்ள பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கைது செய்யப்பட்ட மன்சூர் அலிகான் ஜாமீன் மனு தள்ளுபடி!  

Last Updated : Jun 22, 2018, 02:22 PM IST
பசுமை வழிச்சாலை எதிர்ப்பு! மன்சூர் அலிகான் ஜாமீன் மனு தள்ளுபடி! title=

சென்னை-சேலம் இடையே ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பில் பசுமை விரைவு சாலை அமைப்பதாக தமிழக அரசு தெரிவித்ததையடுத்து, அதிகாரிகள் இன்று ஆய்வு பணி மேற்கொண்டனர். இதற்கு போது மக்கள் இடையே கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. 

பசுமை விரைவு சாலை அமைத்தால் சுமார் 66 கிலோ மீட்டர் தூரம் குறைகிறது. தற்போது சென்னை-சேலம் இடையே உள்ள 340 கிலோ மீட்டர் தூரத்தை 5 மணி நேரம் முதல் 6 மணி நேரம் ஆகும். ஆனால், இந்த சாலை அமைந்தால் தூரம் 274 கிலோ மீட்டராக குறையும். பயண நேரமும் 3 மணி நேரமாக குறையும். 

இந்த விரைவு சாலை தாம்பரத்தில் தொடங்கி காஞ்சிபுரம் மாவட்டம் வழியாக திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு வந்தவாசி, போளுர், ஆரணி, செங்கம் வழியாக தருமபுரி மாவட்டத்தில் அரூர், தீர்த்தமலை, பாப்பிரெட்டிப்பட்டி வழியாக மஞ்சவாடி கணவாயை அடைகிறது. இதனால், விளை நிலங்கள், வனப்பகுதிகள் அழிக்கப்படும் அபாயம் ஏற்படும். 

இதையடுத்து, பசுமை வழி சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கைது செய்யப்பட்ட மன்சூர் அலிகான் ஜாமீன் கோரி சேலம் ஓமலூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், இவரின் ஜாமீன் மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 

Trending News