இதுதான் திமுக அரசின் மாஸ்டர் பிளான் - விளக்கம் கொடுத்த மனுஷ்ய புத்திரன்!

டெல்லியில் இருந்து டெல்லியோட கிளர்க் ஒரு ஆள் தமிழக கவர்னர் பதவியில் அமர்ந்துக்கொண்டு திமுவிற்கு எல்லாவிதமான தொந்தரவுகளை கொடுத்து வருகிறார் - மனுஷ்ய புத்திரன்.  

Written by - RK Spark | Last Updated : May 8, 2023, 07:23 AM IST
  • திமுக அரசை எப்படியாவது முடக்கி விட வேண்டும்.
  • இது பாஜகவின் வெறித்தனமான சூழ்ச்சி.
  • தமிழக முதலமைச்சர் ஒவ்வொரு நாளும் போராடி கொண்டிருக்கிறார்.
இதுதான் திமுக அரசின் மாஸ்டர் பிளான் - விளக்கம் கொடுத்த மனுஷ்ய புத்திரன்! title=

காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம்,வாலாஜாபாத் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் காஞ்சிபுரம் அடுத்த அய்யம்பேட்டையில் திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக் கூட்டம் வாலாஜாபாத் ஒன்றியக்குழு துணைத் தலைவரும்,வாலாஜாபாத் தெற்கு ஒன்றிய செயலாளருமான பி.சேகர் தலைமையில் நடைபெற்றது.  இந்த பொதுக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக திமுக தகவல் தொழில் நுட்ப அணியின் மாநில ஆலோசகர் மனுஷ்ய புத்திரன் பங்கேற்று பொது மக்கள் மத்தியில் சிறப்புரையாற்றி பேசினார். அப்போது அவர் பேசுகையில்,  தமிழ்நாட்டில் மத மோதல்களை உருவாக்க வேண்டும் என்பதற்காக, இந்தியாவில் மத மோதல்களை உருவாக்குவதற்காக சில திரைப்படங்களை எடுக்கின்றார்கள்,அதனை திரையிட முயற்சிக்கின்றார்கள், தமிழ்நாட்டில் கேரளா ஸ்டோரி என்ற மலையாள படம் வெளியிடப்பட்ட போது  திமுக ஆட்சி ஏன் அதனை தடுக்கவில்லை, ஏன் கேரளா ஸ்டோரி திரைப்படத்தை திரையிட அனுமதித்தார்கள் என்று எல்லோருக்கும் தோன்றியது.

திமுக ஆட்சி செய்ய வேண்டியதை எப்படி செய்ய வேண்டும் என்பதற்கு இதுவே ஓர் நல்ல உதாரணம், தமிழகத்தில் அனைத்து திரையரங்குகளில் இருந்து கேரளா ஸ்டோரி படத்தை தியேட்டர்காரர்களே எடுத்து விட்டனர், இது எப்படி நடந்தது என்பதனை உங்களுடைய மனசாட்சியிற்கே விட்டு விடுகின்றேன். நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் நாம் அதனை தடை செய்ய முடியாது, தடை செய்தால் நீதிமன்றத்தின் கொந்தளிப்பை நாம் சந்திக்க வேண்டியிருக்கும், ஒரு நாள் அவகாசத்தில் தியேட்டர்காரர்களே தியேட்டர்களில் படம் ஓட வில்லை, நாங்க படத்தை எடுத்து விடுகின்றோம் என ஒட்டு மொத்தமாக சொன்னால் தியேட்டர்காரர்களே தானாக எடுப்பார்களா, இது தான் திராவிட மாடல். இது தான் திமுகவின் அணுகுமுறை, எதிரியை எப்படி சமாளிக்க வேண்டும், எப்படி கையாள வேண்டும் என திமுவிற்கு தெரியும். அதனை விட்டு விட்டு திமுக எதனையும் செய்யவில்லை என முகநூலில் எழுதுபவர்கள், யூடியூப்பில்  பேசுபவர்களுக்கு  எந்த பொறுப்பும் கிடையாது. அவர்களுக்கு ஆட்சி, நிர்வாகம் என்றால் என்னவென்று தெரியாது. ஆட்சியில் இருப்பவர்கள் ஒவ்வொன்றை எவ்வளவு கவனமாக செய்ய வேண்டும் என்பதனை இன்றைக்கு திமுக செய்து கொண்டிருக்கின்றது என பேசினார்.

மேலும் படிக்க | தமிழகத்தில் நாளை வெளியாகிறது +2 ரிசல்ட்!!

மேலும் அவர் பேசுகையில், திமுக இயக்கமும், திமுக அரசும் இல்லாவிட்டால் பாஜக என்கிற கொடிய சக்தி தமிழ்நாட்டில் கால் ஊன்றி விடும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை,  பாஜகவை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் பெரிய இயக்கங்களை நடத்துவார்களா ? அவர்கள் எல்லாம் பாஜகவின் கூலிப் படைகளாக மாறிவிட்டார்கள், தமிழ்நாட்டு மக்களை காட்டி கொடுப்பதற்கு அவர்கள் எப்போதோ தயாராகிவிட்டார்கள் எனவும், திமுக ஆட்சி வருவதற்கு முன்பும், திமுக ஆட்சிக்கு வந்தப்பின்பும் என்னென்ன நன்மைகள் கிடைத்தது என எண்ணிப்பார்த்தால் தான் மீண்டும் தமிழகத்தில் ஓர் மோசமான ஆட்சி வந்து விடாமல் நாம் பாதுகாக்க முடியும்.  

பொது மக்களுக்காக இன்னும் பல ஏராளமான திட்டங்களை நிறைவேற்றுவதற்கு முதலமைச்சர் காத்துக்கொண்டிருக்கிறார், ஆகையால் பொய் பிரச்சாரங்களை எதிர்த்து நிற்பதும், திமுக ஆட்சியை காப்பாற்றுவதும், முதலமைச்சரின் கரங்களை வலிமை படுத்துவதும் மக்களின் கடமை. திமுகக்காரன், திமுகவின் ஆதரவாளனாக இருப்பது என்பது போர் கலத்தில் நிற்பதற்கு சமமானது, ஒவ்வொரு நாளும் யூடியூப்பை திறந்தாலும் சரி, சமூக வலைத்தளங்களிலும் அரசியல் ஆதாரமற்றவைகளை எதிர் கட்சிகளை சேர்ந்தவர்கள் சொல்ல கூடிய கட்டுக் கதைகளுக்கு எந்த வித ஆதரமும், நம்பகத்தன்மையும் இல்லை. ஆனால் மக்களை ஏமாற்றி விடலாம் என கற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள் என பேசினார்.

மேலும் அவர் பேசுகையில்,  திமுக அரசுக்கு ஏராளமான நெருக்கடிகள் இருக்கின்றன, டெல்லியில் இருந்து  டெல்லியோட கிளர்க் ஒரு ஆள் தமிழக கவர்னர் பதவியில் அமர்ந்துக்கொண்டு திமுவிற்கு எல்லாவிதமான தொந்தரவுகளை கொடுத்து வருகிறார். மோடி அரசாங்கத்தின் உடைய ஒரு கிளர்க் தான் கவர்னர் என்று அழைக்கின்றார்கள், அந்த ஆபிஸ் கிளர்க் என்பவர் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட திமுக  அரசாங்கம் நிறைவேற்றுகின்ற ஓர் சட்டத்திற்கும் கூட அனுமதி கொடுக்க மறுக்கிறார், இல்லாத பொய் பிரச்சாரங்களை திமுகவிற்கு எதிராக அவர் கட்டமைத்து வருகிறார். திமுக அரசை எப்படியாவது முடக்கி விட வேண்டும், வீழ்த்தி விட வேண்டும் என்கிற பாஜகவின் வெறித்தனமான சூழ்ச்சியிற்க்காக இடைவிடாமல் கவர்னர் மாளிகையில் நம்முடைய செலவில், நம்முடைய பணத்தில் சாப்பிட்டு கொண்டு நமக்கு எதிராக தினம் தினம்  ஓர் செயலில் கவர்னர் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். இதனை எதிர்த்து தமிழக முதலமைச்சர் ஒவ்வொரு நாளும் போராடி கொண்டிருக்கிறார்.

தமிழகத்தில் இந்தியை திணிக்க பார்க்கின்றனர், கல்வி கொள்கை என்ற பெயரில் கல்வியை வசதி படைத்தவர்களுக்கு மட்டும் உரியதாக மாற்ற முயற்சிக்கிறார்கள், இட ஒதுக்கீட்டை , சமூக நீதியை ஒழித்து கட்ட பார்க்கிறார்கள். இதனை எல்லாம் திமுக அரசு எதிர்த்து போராடி கொண்டிருக்கிறது.  திமுக அரியாசனத்தில் சவுகரியமாக உட்கார்ந்துக்கொண்டு ஆட்சி செய்யவில்லை, திமுக மீது ஒவ்வொரு நாளும் திட்டமிட்டு புது புது பிரச்சினைகளை உருவாக்கி கொண்டிருக்கின்றார்கள். ஆனால் எங்களுக்கு ஆயிரம் பிரச்சினைகளை கொடுத்தாலும் மக்களின் மீதுள்ள நம்பிக்கையில், மக்களுடைய ஆதரவுடன் திமுக ஆட்சியை பாதுகாப்போம், மக்கள் நல திட்டங்களை நிறைவேற்றுவோம் என்ற உணர்வோடு தான் இன்றைக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு கொண்டிருக்கிறார் என பேசினார்.  இந்த பொதுக் கூட்டத்தில் வாலாஜாபாத் ஒன்றியக்குழுத் தலைவர் தேவேந்திரன், வாலாஜாபாத் பேரூர் கழக செயலாளர் பாண்டியன்,ஒன்றிய அவைத்தலைவர் சுந்தரமூர்த்தி உள்ளிட்ட ஏராளமான திமுக உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், நிர்வாகிகள்,தொண்டர்கள்,பொது மக்கள் என ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.

மேலும் படிக்க | மீஞ்சூர் அருகே விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவத்தில் பள்ளிக்கு சீல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News