மறுபடியும் மழையா? சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் மீண்டும் கனமழைக்கான வாய்ப்பு!

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த 6 நாட்களாக தமிழகம் முழுவதும் பரவலான மழை பெய்து வருகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 12, 2021, 11:19 AM IST
மறுபடியும் மழையா? சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் மீண்டும் கனமழைக்கான வாய்ப்பு! title=

தமிழகத்தில், கடந்த சுமார் ஒரு வாரமாக கொட்டித் தீர்த்த மழையின் வேகம் இப்போது சற்றே குறைந்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த 6 நாட்களாக தமிழகம் முழுவதும் பரவலான மழை பெய்து வருகிறது.

குறிப்பாக, சென்னையில் (Chennai) அதிகனமழை பெய்த நிலையில், இன்று சென்னையில் சற்று மழை குறைந்துள்ளது. மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளில் நீரை அகற்றும் பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன. 

இந்த நிலையில், கன்னியாகுமரியில் பெய்த கனமழை அனைவருக்கும் ஆச்சரியமாகவே இருந்தது. கன்னியாகுமரி மழை ‘அவுட் ஆஃப் சிலபஸாக’ வந்துள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் ட்வீட் செய்துள்ளார். 

ஏனெனில் இங்கு இந்த நேரத்தில் இவ்வளவு மழை (Rain) பொழியும் என எதிர்பார்க்கப்படவில்லை. வானிலை ஆய்வுகள் மற்றும் கணிப்புகளின் படி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிக கனமழைக்கான வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தெற்கு கேரளா மற்றும் கன்னியாகுமரி மண்டலங்களில் அதிகன மழை பெய்யும் என எதிர்பார்க்கபப்டுகின்றது.

ALSO READ: Humanity in Rain: மழையில் மலர்ந்து மணம் வீசும் காவல்துறையினரின் மனிதநேயம்  

முன்னதாக, காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, சென்னைக்கு அருகே காரைக்காலுக்கும் ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் இடையில் கரையை கடந்தது. இதன் காரணமாக நேற்று முழுவதும் பல இடங்களில் அதிகன மழை பெய்தது. 

தமிழகத்தில் (Tamil Nadu) பெய்த தொடர்மழை காரணமாக சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தண்டவாளங்களில் தேங்கிய மழை நீரால் புறநகர் ரயில் சேவையும் பாதிக்கப்பட்டது. சென்னை மாநகராட்சி கட்டிடத்திற்கு முன்னர் முழங்கால் அளவிற்கு மழை சூழ்ந்து இருந்தது. மேம்பாலங்களும் கார் பார்க்கிங்காக மாறியது இங்குதான். இரவு முழுவதும் விடாமல் பெய்த கனமழையால் வேளச்சேரியின் பெரும்பாலான பகுதிகளில் இடுப்பளவிற்கு மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காணப்படுகிறது. சென்னை முழுவதும் பல இடங்களில் இதே நிலைதான் உள்ளது.

ALSO READ: மழை ஓய்ந்துவிடும்: வானிலை மைய அறிவிப்பால் மக்கள் நிம்மதி! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News