ரகசிய காதலனை வைத்து கணவரை கொன்று எரித்த மனைவி - நெல்லையில் பயங்கரம் !!

crime : தாகத உறவுக்கு அடிமையான பெண், காதலனை வைத்து கணவரை கொன்று எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மானூர் அருகே அரங்கேறிய பகீர் சம்பவம் பின்னணி..

Written by - Gowtham Natarajan | Last Updated : Aug 5, 2022, 04:23 PM IST
  • 15 நாட்களுக்கு பின், வெளிவந்த அதிர்ச்சி
  • தாகத உறவால் அரங்கேறிய கொடூரம்
  • ரகசிய காதலர்கள் இருவரும் கைது - வாக்குமூலம்
ரகசிய காதலனை வைத்து கணவரை கொன்று எரித்த மனைவி - நெல்லையில் பயங்கரம் !! title=

நெல்லை மாவட்டம் தென்கலம் கிராமத்தின் அருகே உள்ள நாஞ்சான் குளத்தின் கரையோரம் கடந்த மாதம் 20-ந்தேதி சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் எரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தது. இதுதொடர்பாக மானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி தலைமையிலான போலீஸார் வழக்குப்பதிவு செய்து அந்த நபர் யார்? அவரை யார் கொலை செய்தார்கள்? என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தார். கடந்த ஒரு மாதத்தில் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் காணாமல் போனவர்கள் குறித்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை பார்த்து விசாரணை தீவிரமானது.

இந்நிலையில் தாழையூத்து போலீஸ் நிலையத்தில் கடந்த மாதம் தொடக்கத்தில் ராஜா என்பவர் காணாமல் போனதாக அவரது மனைவி வினிதா புகார் அளித்திருந்தார். இதனால் எரித்துக்கொல்லப்பட்ட நபர் ராஜா தானா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக அவரது மனைவி வினிதாவிடம் விசாரித்தபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

நெல்லை ராஜா கொலை, கள்ளக்காதல், கணவரை கொன்ற மனைவி, கள்ளக்காதலன், கைது, மனைவியும் கைது

கேரளா மாநிலம் மூணாறு பகுதியை சேர்ந்தவர் ராஜா.லாரி டிரைவரான இவருக்கு கடந்த 15 வருடங்களுக்கு முன்பு வினிதாவுடன் திருமணமாகி உள்ளது. ராஜா சொந்தமாக லாரி வைத்து ஓட்டி வந்துள்ளார். அங்கு தொழில் சரியாக இல்லாததால் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு ராஜா தனது குடும்பத்துடன் நெல்லையை அடுத்த தாழையூத்துக்கு வந்து

விட்டார். கயத்தாறு அருகே உள்ள வலசல் பகுதியை சேர்ந்த தர்மராஜா(25) என்பவரின் நட்பு கிடைத்துள்ளது. தொடர்ந்து ராஜாவின் லாரியில் தர்மராஜா கிளீனராக வேலைக்கு சேர்ந்துள்ளார். இதன் காரணமாக தர்மராஜா அடிக்கடி ராஜாவின் வீட்டுக்கு சென்று வந்துள்ளார். அப்போது ராஜாவின் மனைவி வினிதாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் தகாத உறவாக மாறியதாகக் கூறப்படுகிறது.இருவரும் ராஜா இல்லாத நேரத்தில் பழகி வந்ததாக சொல்லப்படுகிறது. இதனை அறிந்த ராஜா அவர்களை கண்டித்துள்ளார். ஆனாலும் 2 பேரும் உறவை கைவிட மறுத்ததாகக் கூறப்படுகிறது.

நெல்லை ராஜா கொலை, கள்ளக்காதல், கணவரை கொன்ற மனைவி, கள்ளக்காதலன், கைது, மனைவியும் கைது

சம்பவத்தன்று காலை ராஜா வீட்டில் இல்லாததை அறிந்த தர்மராஜா, அவரது வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு வினிதாவுடன் தனிமையில் இருந்துள்ளார். அந்த நேரத்தில் வீட்டுக்கு வந்த ராஜா, அதனை பார்த்து ஆத்திரம் அடைந்தார். அப்போது ராஜாவுக்கும், தர்ம ராஜாவுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில் தர்மராஜா ஆத்திரம் அடைந்து ராஜாவை கொலை செய்தார். பின்னர் வினிதாவின் உதவியுடன் ராஜா உடலை மோட்டார் சைக்கிளில் தூக்கி சென்று மானூர் குளத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

மேலும் படிக்க | காதலிக்க மறுத்த பெண்ணை கழுத்தை அறுத்த இளைஞர்! சிகிச்சை பலனளிக்குமா?

அங்கு வைத்து ராஜாவின் உடலை பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு எதுவும் தெரியாதது போல வினிதாவும், தர்மராஜாவும் வீட்டுக்கு திரும்பி வந்துவிட்டனர். இதையடுத்து  இந்த வழக்கில் வினிதா, தர்மராஜா ஆகியோரை கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தகாத உறவால் காதலனை வைத்து மனைவியே கணவரை எரித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க | சேலத்தில் தலை வெட்டி முனியப்பனாக மாறிய புத்தர் சிலை! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News