12-ஆம் வகுப்பு தேர்வு முடிவு; வெளியீட்டு தேதியில் மாற்றம்?

தமிழகம் மற்றும் புதுவையில் வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிப்புகள் வெளியாகியுள்ளது!

Last Updated : Apr 11, 2019, 10:34 PM IST
12-ஆம் வகுப்பு தேர்வு முடிவு; வெளியீட்டு தேதியில் மாற்றம்? title=

தமிழகம் மற்றும் புதுவையில் வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிப்புகள் வெளியாகியுள்ளது!

தமிழகம் மற்றும் புதுவையில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1-ஆம் துவங்கி 19-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை 8 லட்சத்து 61 ஆயிரம் மாணவ மாணவிகள் எழுதினர். 

இந்நிலையில் இந்த தேர்வின் தேர்வுத்தாள்கள் திருத்தும் பணி கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது தேர்வுதாள் திருத்தும் பணிகள் முடிவடைந்த நிலையில் இந்த தேர்வின் முடிவுகள் திட்டமிட்டப்படி வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வின் முடிவுகள் ஏப்ரல் 19-ஆம் தேதி வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது, இந்நிலையில் அறிவித்தபடி அதே தேதியில் தற்போது தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தேர்வுத்துறை இயக்குநர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.,

இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குனர் இன்று செய்தியாளர்களிடம் கூறியபோது, "ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி 19-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும், அதில் எந்த மாற்றமும் இருக்காது " என்றும் தெரிவித்தார். தேர்வு முடிவு வெளியாகும் தேதி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்

Trending News