சவால்களை சமாளித்து எடப்பாடி அரசின் ஓராண்டை நிறைவு!

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற போது கடந்த ஆண்டு இதே மாதம் எடப்பாடி பழனிசாமி தமிழக முதல் அமைச்சர் ஆனார். அவர் பதவியேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது.

Last Updated : Feb 16, 2018, 09:18 AM IST
சவால்களை சமாளித்து எடப்பாடி அரசின் ஓராண்டை நிறைவு!  title=

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற போது கடந்த ஆண்டு இதே மாதம் எடப்பாடி பழனிசாமி தமிழக முதல் அமைச்சர் ஆனார். அவர் பதவியேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது.

சசிகலாவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் போர்க்கொடி உயர்த்திய பின்னர், எடப்பாடி முதலமைச்சராக வந்தார். சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பால் சசிகலா முதலமைச்சராக முடியாததால், செங்கோட்டையன் ஒருவர்தான் ஆட்சியின் தலைமைப் பொறுப்புக்கு வருவார் என பலரும் எண்ணியிருந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி முதல் அமைச்சராக தேர்வானார். 

இந்நிலையில் இன்றுடன் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் முதல் அமைச்சராக ஓராண்டை நிறைவு செய்தார்.

Trending News