சென்னை : பள்ளிக்கரணையில் வாலிபர் கழுத்தறுத்து கொலை ..!

சென்னை அடுத்த பள்ளிக்கரணையில் இளைஞர் ஒருவர் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Written by - Gowtham Natarajan | Last Updated : Mar 21, 2022, 01:37 PM IST
  • 23 வயதே ஆன இளைஞர் படுகொலை....
  • மர்ம உறுப்பு, கழுத்தை அறுத்து கொடூர கொலை...
  • மர்மத்தில் நீடிக்கும் இளைஞரின் மரணம்...
சென்னை : பள்ளிக்கரணையில் வாலிபர் கழுத்தறுத்து கொலை ..! title=

சென்னை பள்ளிக்கரணை அடுத்த ஜல்லடியன்பேட்டை ஏரிக்கரை பகுதியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு நிலையில் சடலமாக கிடந்திருக்கிறார். அவ்வழியாகச் சென்றவர்கள் அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து பள்ளிக்கரணை போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
 
தகவல் அறிந்தது உடனே சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சம்பவ இடத்தை பாதுக்காப்பு வளையத்திற்குள் கொண்டுவந்தனர். தொடர்ந்து கழுத்து அறுக்கப்பட்டு  இறந்து கிடந்த நபரை பற்றி விசாரிக்கும் போது ஜல்லடியான்பேட்டை நெசவாளநகர் பகுதியைச் சேர்ந்த 23 வயதான நரேஷ் குமார் என்பது தெரியவந்தது. இவர் ஏசி மெக்கானிக்காக வேலை பார்த்து வந்திருக்கிறார். இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடலை ஆய்வு செய்த மருத்துவர்கள் அதிர்ந்து போயிருக்கிறார்கள்.  உடலில் கழுத்து மட்டுமல்லாமல் மர்ம உறுப்பும் அறுத்து எடுக்கப்பட்டிருந்தது. இறப்பதற்கு முன்பு நரேஷ் குமாரை சித்தரவதை செய்து கொலை செய்தது தெரியவந்தது. 

Murder

மேலும் படிக்க | தம்பியை கத்தியால் குத்திகொன்ற அண்ணன்..!

இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நரேஷ் எதற்காக கொலை செய்யப்பட்டார்? யார் அவரை கொலை செய்தார்கள்? என்பது குறித்து விசாரணையை தொடங்கி உள்ளனர். முதற்கட்ட விசாரணையில் மது அருந்தும் பழக்கமுள்ள நரேஷ், அதே பகுதியில் உள்ள சில இளைஞர்களும் தகராறில் ஈடுபட்டு விரோதத்தை வளர்த்து கொண்டிருப்பது தெரியவந்தது.அதில் யாரேனும் முன்விரோதம் காரணமாக திட்டமிட்டு அவரை கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். 

Pallikaranai

மேலும் படிக்க | நில மோசடி வழக்கு ஒன்றில் பிரபல நடிகரின் சகோதரர் கைது!

23 வயதே ஆன இளைஞர் ஒருவரை மர்ம உறுப்பு மற்றும் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னை பள்ளிக்கரணை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தொடர்ந்து சம்பவ இடத்தில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். விசாரணையின் முடிவில் உண்மையான குற்றவாளி போலீசில் சிக்கிய பின்னரே நரேஷ் குமார் கொலையில் உள்ள மர்மங்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும்  சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News