தம்பியை கத்தியால் குத்திகொன்ற அண்ணன்..!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட தம்பியை கத்தியால் குத்திகொன்ற அண்ணன் போலீசாரால் கைது செய்யப்பட்டார். 

Written by - Gowtham Natarajan | Last Updated : Mar 19, 2022, 01:30 PM IST
  • குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட தம்பி
  • ஆத்திரத்தில் கத்தியால் குத்திகொன்ற அண்ணன்
  • குற்றம் சாட்டப்பட்டவர் போலீசாரால் கைது- விசாரணை
தம்பியை கத்தியால் குத்திகொன்ற அண்ணன்..! title=

பண்ருட்டி அருகே உள்ள முத்தாண்டிகுப்பம் சேர்ந்தவர் தனசேகர் பால். ஓட்டுநராக பணிபுரிந்து வரும் இவர் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து பெற்றோருடன் வசித்து வருகிறார். தனசேகரின் சகோதரர் நீலமேகம் குடிபழக்கத்திற்கு அடிமையானவர். அடிக்கடி பணம் கேட்டு வீட்டில் தகராறில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. 

Murder

மேலும் படிக்க | 3 வயது குழந்தையிடம் பாலியல் சீண்டல்:முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை..!

இந்நிலையில் சம்பவத்தன்று, மதுபோதையில் இருந்த நீலமேகம், தனசேகரனிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தனசேகர் வீட்டிலிருந்த கத்தியை எடுத்து தம்பியை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த நீலமேகம் சம்பவ இடத்திலேயே பலியானார்.

மேலும் படிக்க | கற்பழிப்பு முயற்சியில் பயங்கரம் - 5 மாத கர்ப்பிணி படுகொலை

இந்நிலையில் தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவரின் நீலமேகத்தின் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து தம்பியை கத்தியால் குத்திய தனசேகரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News