திருவாரூர் மக்களின் தேவை "தேறுதல் தான், தேர்தல் அல்ல" -தமிழிசை!

திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட இடைத்தேர்தல் பணிகளை தேர்தல் ஆணையம் நிறுத்தியுள்ளது வரவேற்கத்தக்கது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவத்துள்ளார்!

Last Updated : Jan 7, 2019, 08:04 AM IST
திருவாரூர் மக்களின் தேவை "தேறுதல் தான், தேர்தல் அல்ல" -தமிழிசை! title=

திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட இடைத்தேர்தல் பணிகளை தேர்தல் ஆணையம் நிறுத்தியுள்ளது வரவேற்கத்தக்கது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவத்துள்ளார்!

திருவாரூர் இடைத்தேர்தலை தள்ளிவைக்க கோரிய மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் நிலையில், தேர்தல் பணிகளை தேர்தல் ஆணையம் நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தில் இந்த முடிவிற்கு எதிர்புகளும், ஆதரவுகளும் நிகராக எழுந்தவண்ணம் உள்ளன. இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள், தேர்தல் ஆணையத்தின் உத்தரவினை வரவேற்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது...

"திருவாரூர் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது புயலுக்குப் பின்பு அங்கே தங்கி மருத்துவ நிவாவரண பணி செய்த அனுபவத்தில் சொல்கிறேன் திருவாரூர் மக்களுக்கு இப்போதைய தேவை தேறுதல் தான், தேர்தல் அல்ல, அவர்கள் வாழ்வை மீட்டெடுப்பது தான் தேவை ஓட்டெடுப்பு அல்ல, தேர்தல் ஆணையத்திற்கு நன்றி." என குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் மறைவையொட்டி காலியான திருவாரூர் தொகுதியில் வரும் ஜனவரி 28-ஆம் நாள் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதனையடுத்து திருவாரூர் தொகுதியில் போட்டியிடும் தங்கள் கட்சி வேட்பாளர்களை திமுக, நாம் தமிழர், அமமுக கட்சியனர் அறிவித்தனர். விரைவில் அதிமுக கட்சியினரும் அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

இதற்கிடையில்., கஜா புயல் நிவாரணப்பணிகளை சுட்டிக்காட்டி திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான டி.ராஜா வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவின் மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் வரும் நிலையில்., தற்போது திருவாரூர் சட்டமன்ற தொகதிக்கு அறிவிக்கப்பட்ட இடைத்தேர்தல் பணிகள் நிறுத்தி வைக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Trending News