ஸ்டாலின் ஜேக்கப் மரணம்... முதலமைச்சர் இரங்கல்... இணையம் முழுவதும் கண்ணீர் அஞ்சலி

Stalin Jacob Death: சென்னையில் பிரபல புகைப்பட கலைஞரும், தொழில் முனைவருமான ஸ்டாலின் ஜேக்கப் சாலை விபத்தில் சிக்கி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

Written by - Sudharsan G | Last Updated : Mar 4, 2023, 07:49 AM IST
  • இவருடன் பயணித்த அவரின் நண்பரும் உயிரிழந்தார்.
  • முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
  • நேற்று முன்தினம் பிறந்தநாள் கொண்டாடியுள்ளார்.
ஸ்டாலின் ஜேக்கப் மரணம்... முதலமைச்சர் இரங்கல்... இணையம் முழுவதும் கண்ணீர் அஞ்சலி  title=

Photographer Stalin Jacob Death: கோயம்புத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஸ்டாலின் ஜேக்கப் ( 37 ) . இவர் பிரபல புகைப்படக் கலைஞர் ஆவார். சென்னையில் வசித்த இவர், க்ளவுட் கிட்சன் நடத்தி வருகிறார். What a varuvadu என்ற ஆன்லைனில் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். 

சமூக வலைதளத்தில் மிகப் பிரபலமான ஸ்டாலின் ஜேக்கபின் பல்வேறு புகைப்படங்கள் வைரலாகி உள்ளன. அதுமட்டுமின்றி தனது கிளவுட் கிட்சன் தொழிலையும் செய்து வந்தார். அவ்வப்பொழுது ஒளிப்பதிவு மற்றும் புகைப்படங்கள் எடுப்பதற்காக சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் பயணிப்பது வழக்கமாகக் கொண்டு வந்துள்ளார்.

மேலும் படிக்க | இடைத்தேர்தல் ஒரு சாக்கடை என அப்போது சொன்னதை திருத்திக் கொள்கிறேன்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் தனது நண்பரான சென்னை அம்பத்தூர் பகுதி சேர்ந்த விஷ்ணு, என்பருடன் அரசு நிகழ்ச்சி ஒன்றை நேற்று (மார்ச் 3) ஒளிப்பதிவு செய்துவிட்டு,  திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, சாலையை கடக்க முயன்றபோது  கனரக வாகன மோதி சம்பவ இடத்திலேயே இருவரும் தூக்கி வீசப்பட்டு உயிருக்கு போராடினர். 

அருகில் இருந்தவர்கள் கொடுத்த தகவலின் பெயரில் 108 ஆம்புலன்ஸ் விரைந்து வந்து இருவரையும் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர்.

முன்னதாக உயிரிழந்த ஸ்டாலின் ஜேக்கப் நேற்று முன்தினம் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். மேலும் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள கனிமொழிக்கு நெருக்கமான ஸ்டாலின் ஜேக்கப், அவரை நேற்று நேரடியாக சென்று அவருடன் புகைப்படமும் எடுத்துள்ளார். பிரபல புகைப்பட கலைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்,"நேற்றுதான் பிறந்தநாள் கொண்டாடிய நிலையில், திமுகவின் துடிப்பான சமூக வலைத்தளச் செயல்வீரர் ஸ்டாலின் ஜேக்கப் இத்தனை இளம் வயதில் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார் என்ற செய்திகேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் & உடன்பிறப்புகளுக்கு எனது ஆறுதலும் ஆழ்ந்த இரங்கல்" என குறிப்பிட்டுள்ளார். 

மேலும் படிக்க | ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட காதல் ஜோடி! அரை நிர்வாணத்துடன் காலில் விழ வைத்து தண்டனை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News