கானா பாட்டுக்கு போக்சோ?... பாடகரை தேடும் போலீஸ்...

 சிறுமிகள் பாலியல் வன்கொடுமையை ஊக்குவிக்கும் வகையில் பாடிய கானா பாடல் பாடிய கானா பாடகரை காவல்துறையினர் தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Written by - JAFFER MOHAIDEEN | Edited by - S.Karthikeyan | Last Updated : Dec 23, 2021, 09:13 AM IST
கானா பாட்டுக்கு போக்சோ?... பாடகரை தேடும் போலீஸ்... title=

சென்னையின் அடையாளமான கானா பாடல்களுக்கு எப்பொழுதும் ஒரு ரசிகர் கூட்டம் உண்டு. அன்றாட நிகழ்வுகளை சினிமா பாட்டு மெட்டுக்கு பாடுவதுபோய் சினிமா பாடல்களே கானா பாடல்கள் என்ற பெயர்பெற்று ரசிகர்களை ஈர்த்தது. அரசு விழிப்புணர்வு பாடல்களே சில சமயங்களில் கானாவாக பாடப்பட்டிருக்கிறது. அப்படி பாடப்பட்ட விழிப்புணர்வு பாடல்கள் வரவேற்பும் பெற்றிருக்கிறது. 

ALSO READ | அதிகமான ஆண் நண்பர்கள்..காட்டிக்கொடுத்த கால் ரேகை.. பெண் செவிலியர் கொலையில் விலகிய மர்மம்!

குறிப்பாக சமூக வலைதளங்களில் கானா பாடகர்களின் பாடல்களுக்கு வரவேற்பு அதிகம் உள்ளது. இதன் காரணமாக கானா பாடகர்கள் அதிகளவில் வெளியே தெரிய தொடங்கியுள்ளனர். அதில் சிலர் ரவுடித்தனத்தையும், போக்கிரித்தனத்தையும் ஊக்குவிக்கும் வகையில் வரிகள் அமைத்து பாடி வருகிறார்கள். அதனையும் ரசிப்பதற்கு என்று ஒரு கூட்டம் உள்ளது. அப்படி ஏடாகூடமான வரிகளை போட்டு பாடிய பாடல் ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் ’டோனி ராக் எ போட்டி கானா’ என்ற பெயரில் வீடியோ பாடல் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் சரவெடி சரண்  மற்றும் டோனி ராக் ஆகிய இரு கானா பாடகர்கள் ஒரு பாடலை பாடியுள்ளனர். இதில் சரண் பாடும் பாடலில் உள்ள வரிகள் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைகளை ஊக்குவிக்கும் வகையில் இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

’பால்வாடி படிக்கும் போதே வாங்கி குடுத்தோம் பூந்திய, 8-வது படிக்கும் போதே எடுக்க வைத்தோம் வாந்திய’ என கானா பாடகர் சரண் என்பவர் பாடியுள்ளார். இந்தப் பாடல், திருவள்ளூர் எஸ்.பி. வருண் குமார் கவனத்திற்கு இந்தப் பாடல் சென்ற நிலையில், அந்த பாடலை பாடியவர்கள் விவரங்களை சேகரித்து வருவதாக கூறப்படுகிறது. போக்சோ சட்டத்தின் சிறார்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் நடக்க தூண்டும் 16-வது பிரிவை கவனத்தில் கொள்ளும்படியும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

அண்மைக்காலமாக பாலியல் தொல்லை காரணமாக தமிழகம் முழுவதும் பள்ளி மாணவிகள் தற்கொலை செய்வது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தடுக்க மாநில அரசு பல்வேறு முயற்சிகள் எடுத்தும் வரும் நிலையில், இதுபோன்ற பாடல்கள் சமூகத்தில் நஞ்சை விதைக்கும் வகையில் இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ALSO READ | தொழில் விரோதப் போட்டியில் தொழில் அதிபரை கொலை செய்ய முயற்சி; 5 பேர் கைது!

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News