சசிகலா தலைமை ஏற்க வேண்டும் போஸ்டரால் பரபரப்பு!!

Last Updated : Dec 9, 2016, 03:02 PM IST
சசிகலா தலைமை ஏற்க வேண்டும் போஸ்டரால் பரபரப்பு!!  title=

அதிமுக ஆட்சிக்கும் சசிகலா தலைமை ஏற்க வேண்டும் என்ற போஸ்டர்களால் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜெயலலிதா டிசம்பர் 5-ம் தேதி இரவு 11-30 மணி அளவில் மரணமடைந்தார். ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து ஓ. பன்னீர்செல்வம் தமிழகத்தின் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

இந்நிலையில் தற்போது அதிமுகவில் அடுத்த தலைமை யார் வாசிப்பார் என்பதில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் சசிகலாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் குரல்கள் எழுப்ப படுகின்றன.

இந்த நிலையில் சசிகலாவே ஆட்சிக்கும் தலைமை ஏற்க வேண்டும் என அழைப்பு விடுத்து ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த போஸ்டர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கடும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Trending News