நீர்நிலைகளில் குடிமராமத்துப் பணி மேற்கொள்ள ரூ.499 கோடி ஒதுக்கீடு

தமிழகத்தில் நீர்நிலைகளில் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள ரூ.499 கோடி ஒதுக்கீடு

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 14, 2019, 03:22 PM IST
நீர்நிலைகளில் குடிமராமத்துப் பணி மேற்கொள்ள ரூ.499 கோடி ஒதுக்கீடு title=

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, தமிழகத்தில் நீர்நிலைகளில் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள ரூ.499 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார்.

அதுக்குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: 

குடிமராமத்து பணிக்கு ரூ.499 கோடி கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதில் சென்னை மண்டலத்திற்கு ரூ.93 கோடியும், திருச்சி மண்டலத்திற்கு ரூ.109 கோடியும், மதுரை மண்டலத்திற்கு ரூ.230 கோடியும், கோவை மண்டலத்திற்கு ரூ.66 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Trending News