ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்: இன்று சீமான் எழுச்சியுரை!!

ஆர்.கே. நகர் தொகுதியின் வ.உ.சி நகர் கடைவீதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

Last Updated : Dec 21, 2017, 02:06 PM IST
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்: இன்று சீமான் எழுச்சியுரை!!  title=

ஆர்.கே. நகர் தொகுதியின் வ.உ.சி நகர் கடைவீதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

முன்னால் முதல்வர் ஜெயலலிதா மறைவை அடுத்து, அவர் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது.ஏப்ரல் 12-ம் தேதி நடைபெறவிருக்கும் இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக கா.கலைக்கோட்டுதயம் அவர்கள் “மெழுகுவர்த்திகள்” சின்னத்தில் போட்டியிடுகிறார். 

இடைத்தேர்தலில் வென்று புதிய மாற்றத்தை உருவாக்கும் நோக்கில் நாம் தமிழர் கட்சியினர் தீவிரமாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று மாலை 4 மணியளவில் ஜீவா நகர் அருகேயுள்ள வீதிகளில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் வீடு வீடாக நடந்து சென்று மக்களை நேரில் சந்தித்துவாக்கு சேகரிக்கவுள்ளார். 

அதனைத்தொடர்ந்து இரவு 7 மணிக்கு, வ.உ.சி நகர் கடைவீதியில் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் சீமான் எழுச்சியுரையாற்றுகிறார்.

Trending News