செந்தில் பாலாஜி வழக்கு! மூன்றாவது நீதிபதி நியமனம்! யார் தெரியுமா?

செந்தில் பாலாஜி மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை விசாரிக்கும் மூன்றாவது நீதிபதி சி.வி.கார்த்திகேயனை நியமித்து தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா உத்தரவு.  

Written by - RK Spark | Last Updated : Jul 5, 2023, 12:49 PM IST
  • மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனு.
  • மாறுபட்ட தீர்ப்பை வழங்கிய நீதிபதிகள்.
  • மூன்றாவது நீதிபதி சி.வி. கார்த்திகேயன் நியமனம்.
செந்தில் பாலாஜி வழக்கு! மூன்றாவது நீதிபதி நியமனம்! யார் தெரியுமா? title=

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி, சில தினங்களுக்கு முன்னர் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவில் நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரத் சக்ரவர்த்தி ஆகியோர் நேற்று மாறுபட்ட தீர்ப்பை வழங்கிய நிலையில் மூன்றாவது நீதிபதி விசாரிக்க பரிந்துரைத்தனர்.  அதன்படி அந்த வழக்கை விசாரிப்பதற்கான நீதிபதியாக சி.வி கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார்.  அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதாக கூறி, அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரிப்பதற்கு, மூன்றாவது நீதிபதியாக, நீதிபதி கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார்.  சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, சட்ட விரோத காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவரை விடுவிக்க உத்தரவிட வேண்டும் என அவரது மனைவி மேகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார்.

மேலும் படிக்க | அமைச்சர் செந்தில்பாலாஜி கைது வழக்கு! நீதிபதிகள் சொன்ன தீர்ப்பு!

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் நிஷாபானு மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வு, நேற்று தீர்ப்பு வழங்கியது. 
நீதிபதி ஜெ. நிஷா பானு மேலகாவின் மனு விசாரணக்கு உகந்ததே.  அதனால் ஆட்கொணர்வு ஏற்கப்படுகிறது. செந்தில்பாலாஜியை உடனடியாக விடுவிக்கலாம். நீதிமன்ற காவலில் வைத்தது சட்டவிரோதம் என்பதால் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க முடியாது என தீர்ப்பளித்தார். நீதிபதி D. பரத சக்ரவர்த்தி, ஆட்கொணர்வு மனுவில் நீதிபதி நிஷாபானு கருத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டப் பிறகு இந்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல. செந்தில்பாலாஜியை சிறையில் அடைத்த உத்தரவு சட்டவிரோதம் என கூறமுடியாது. அதனால் மேகலாவின் ஆட்கொணர்வு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. நீதிமன்ற காவலிலேயே காவிரி மருத்துவமனையில் சிகிச்சையை தொடரலாம். உடல்நிலை சரியாகும் வரையிலோ அல்லது மேலும் 10 நாட்களுக்கோ காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் பரிந்துரைக்கும் வரை சிகிச்சை தொடரலாம்.  அதன் பின்னர் சிகிச்சை தேவைப்பட்டால் சிறையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சையை தொடரலாம். சிகிச்சையில் இருக்கும் நாட்களை நீதிமன்ற காவலில் இருக்கும் நாட்களாக எடுத்துக் கொள்ள முடியாது என்று தீர்ப்பளித்தார். 

மாறுபட்ட தீர்ப்பு காரணமாக, வழக்கை மூன்றாவது நீதிபதி விசாரணைக்கு உட்படுத்துவது குறித்து முடிவெடுக்க வழக்கு, தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டது.  உச்ச நீதிமன்றமும், விரைந்து மூன்றாவது நீதிபதியை நியமிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியை கேட்டுக் கொண்டது.  இந்நிலையில், நீதிபதி சி.வி.கார்த்திகேயன், மூன்றாவது நீதிபதியாக நியமித்து தலைமை நீதிபதி கங்கபுர்வாலா அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க | எடப்பாடி பழனிசாமியின் புதிய பிரச்சார வாகனத்துக்கு செல்லூர் ராஜூவின் பலே விளக்கம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News