சேலத்தில் ரவுடி கதிர்வேல் என்கவுண்டரில் சுட்டுக்கொலை!!

சேலத்தில் போலீசாரை வெட்டி விட்டு தப்ப முயன்ற பிரபல ரவுடி கதிர்வேல் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

Last Updated : May 3, 2019, 08:51 AM IST
சேலத்தில் ரவுடி கதிர்வேல் என்கவுண்டரில் சுட்டுக்கொலை!! title=

சேலத்தில் போலீசாரை வெட்டி விட்டு தப்ப முயன்ற பிரபல ரவுடி கதிர்வேல் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சேலம் மாவட்டம் காட்டூரை சேர்ந்தவர் கணேசன் என்பவர் மேட்டுப்பட்டி காவலூர் பஸ் நிறுத்தம் அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதைத் தொடர்ந்து அவரது உடலை பிரேத பரிசோதனை செய்ததில் கொலை செய்யப்பட்டது உறுதியானது.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் மேட்டுப்பட்டி தாதனூரை சேர்ந்த பிரபல ரவுடி கதிர்வேல்  தலைமையிலான கும்பல் கணேசனை கொலை செய்தது தெரியவந்தது. இந்நிலையில் நேற்று காலை குள்ளம்பட்டி ஆலமரத்துக்காடு பகுதியில் கதிர்வேல் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே அங்கு இன்ஸ்பெக்டர் ஆகியோர் அங்கு சென்று அவனை துப்பாக்கியால் சுட்டனர். கதிர்வேலின் உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுவரப்பட்டது.

Trending News