மாமியாரின் கள்ளக்காதலனை வெட்டிக்கொன்ற மருமகன் கைது!

பொதுவாக மருமகன் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதை மாமியார் கண்டிப்பது வழக்கம், ஆனால் இங்கோ மாமியாரின் கள்ளத்தொடர்பை மருமகன் கண்டித்ததையடுத்து, அந்த நபரை கொலையும் செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 25, 2021, 09:21 PM IST
மாமியாரின் கள்ளக்காதலனை வெட்டிக்கொன்ற மருமகன் கைது! title=

சென்னை : இந்த காலகட்டத்தில் கள்ளக்காதல் அதிகளவு பெருகி கொண்டே வருகிறது.  வயது வரம்பு இன்றி கள்ள காதலால் அதிகளவு வன்முறைகள் நடந்து கொண்டே இருப்பது தொடர்கதையான ஒன்றாகி வருகிறது.  இது போன்ற முறையற்ற உறவு பலரது வாழ்க்கையை சீரழித்து விடுகிறது.இது போன்ற ஒரு சம்பவம் தான் இங்கு அரங்கேறியுள்ளது.  பொதுவாக மருமகன் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதை மாமியார் கண்டிப்பது வழக்கம், ஆனால் இங்கோ மாமியாரின் கள்ளத்தொடர்பை மருமகன் கண்டித்ததையடுத்து, அந்த நபரை கொலையும் செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

ALSO READ மதம் மாறியவருக்கு கலப்பு மண சான்று வழங்க முடியாது: சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை புளியந்தோப்பு கே எம் கார்டன 13வது தெருவைச் சேர்ந்தவர் மணிவண்ணன்(40).  இவர் சொந்தமாக ஒரு ஆட்டோ வைத்து ஒட்டி வருகிறார்.  இவர் வழக்கம் போல அதிகாலை நேரத்தில் ஆட்டோ ஒட்டி கொண்டிருந்த பொழுது, அவரை வழிமறித்த இருவர் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பித்து ஓடிவிட்டனர்.  அதனையடுத்து சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் மிதந்தவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.  இதுகுறித்து பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  புகாரின் அடிப்படையில் ,விரைந்த போலீசார், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் போலிஸாரின் முதல்கட்ட விசாரணையில், மணிவண்ணன் வசிக்கும் அதே பகுதியில் பிரகாஷ்(23) என்பவர் வசித்து வருகிறார்.  இவருடைய மாமியார் ஈஸ்வரிக்கும், மணிவண்ணனுக்கும் நீண்ட நாட்களாக கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.  இதையடுத்து மணிவண்ணன் அடிக்கடி ஈஸ்வரியின் வீட்டிற்கு வந்துள்ளார். இவர்களின் இந்த முறையற்ற உறவு ப்ரகாஷிற்கு தெரியவர குடும்ப மானம் போய்விடும் என்று எண்ணி அவர் மாமியார் ஈஸ்வரி மற்றும் மணிவண்ணனை கண்டித்துள்ளார்.

ஆனால் இந்த கள்ள காதலர்கள் இருவரும் பிரகாஷின் பேச்சை சிறிதும் பொருட்படுத்தாது, தங்களது உறவை தொடர்ந்து வந்துள்ளனர்.  இதனால் ஆத்திரமடைந்த பிரகாஷ் , மணிவண்ணனை கொலை செய்ய திட்டமிட்டு , தனது நண்பர் சரத் சந்திரன் என்பவருடன் இணைந்து யாரும் இல்லாத நேரமாக பார்த்து மணிவண்ணனை வெட்டினர் என்பது தெரிய வந்தது .  மேலும் இவர்களை கைது செய்து, இதுகுறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்நிலையில் மணிவண்ணன், ஆபாய கட்டத்தில் இருப்பதால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ALSO READ ரயில் நிலையங்களின் நடைமேடை கட்டணம் ரூ.10 ஆக குறைப்பு!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

 

Trending News