அம்மா அடித்துவிட்டார் - போலீஸில் புகார் அளித்த சிறுவன்

தாய் அடித்ததாக கூறி 15 வயது சிறுவன் காவல் துறையிடம் புகார் அளித்த சம்பவம் கோயம்புத்தூரில் நடந்திருக்கிறது.

Written by - க. விக்ரம் | Last Updated : Dec 21, 2022, 09:21 PM IST
  • தாய் மீது சிறுவன் போலீஸில் புகார்
  • காவல் துறையினர் வழக்குப்பதிவு
  • கோயம்புத்தூரில் இந்தச் சம்பவம் நடந்தது
 அம்மா அடித்துவிட்டார் - போலீஸில் புகார் அளித்த சிறுவன் title=

கோவை மணியக்காரம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தீபக் அரோரா. இவரது மனைவி பிரியா அரோரா. இவர்களுக்கு 15 வயதில் ஒரு மகனும், 13 வயதில் ஒரு மகளும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் 15 வயதான இவர்களது மகன், பிரியா அரோராவின் காரை எடுத்துக்கொண்டு வெளியில் சென்றுள்ளார். இதை பிரியா அரோரா கண்டித்ததுடன் மகனை அடிக்கவும் செய்துள்ளார். இது தொடர்பாக 15 வயது மகன் தனது தந்தை தீபக் அரோராவிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

தீபக் அரோரா  பாஜகவில் இருக்கும் தனது நண்பர்கள் சிலரை அழைத்துக்கொண்டு பிரியா அரோரா வீட்டிற்கு சென்றுள்ளார். அப்பொழுது பிரியா அரோராவிற்கும் அவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஒருவரை  ஒருவர் மாறி மாறி திட்டிக்கொண்டனர்.

இதில் வீட்டிற்குள் நுழைய முயன்ற பாஜகவை சேர்ந்தவர்கள், வீட்டில் இருந்த பிரியா அரோராவையும் அவரது வீட்டில் இருப்பவர்களையும் மிரட்டி விட்டு 15 வயது சிறுவனை அழைத்துச் சென்றனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகிவருகின்றது.

மேலும் படிக்க | பழனி கோயில் குடமுழுக்கு... தமிழில் நடக்க வேண்டும் - சீமான் வலியுறுத்தல்

இதனிடையே 15 வயது சிறுவன் தன்னை தன் தாயாரும், அவருடன் இருந்தவர்களும் அடித்தது குறித்து சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் சிறுவனின் தாயார் பிரியா அரோரா மற்றும் அவரது வீட்டில் இருக்கும் மாசிலாமணி, சூர்யா ஆகிய மூன்று பேர் மீது ஆபாசமாக பேசுதல், காயம் ஏற்படுத்துதல் உட்பட மூன்று பிரிவுகளில் சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

மேலும் படிக்க | சொத்து குவிப்பு வழக்கு - மேல்முறையீடு செய்த எஸ்.பி.வேலுமணி

மேலும் படிக்க | வலுப்பெறுகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

மேலும் படிக்க | ஸ்ரீவில்லிபுத்தூர்: காவல்துறையை கண்டித்து ஓட்டுநர் சாலையின் நடுவே படுத்து போராட்டம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News