ப.சிதம்பரத்தை காவலில் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி...

INX மீடியா வழக்கில் அக்டோபர் 30-ஆம் தேதி வரை ப.சிதம்பரத்தை காவலில் விசாரிக்க அமலாக்கத் துறைக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

Last Updated : Oct 24, 2019, 06:50 PM IST
ப.சிதம்பரத்தை காவலில் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி... title=

INX மீடியா வழக்கில் அக்டோபர் 30-ஆம் தேதி வரை ப.சிதம்பரத்தை காவலில் விசாரிக்க அமலாக்கத் துறைக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

INX மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் மீது CBI, அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

இதில்  CBI தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதைத்தொடர்ந்து ப.சிதம்பரத்தை CBI அதிகாரிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ஆம் தேதி டெல்லியில் உள்ள அவரது வீட்டில் கைது செய்து டெல்லி ரோஸ் அவென்யூவில் உள்ள CBI நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, காவலில் எடுத்து விசாரித்தனர்.

இந்த வழக்கில் திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவலை அக்டோபர் 24-ஆம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதனிடையே INX மீடியா முறைகேடு வழக்கில் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை மேலும் ஒரு வாரம் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்திருந்தது.

இந்நிலையில், இந்த மனு தொடர்பான விசாரணை இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.  விசாரணையின் போது ப. சிதம்பரத்தினை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறையினருக்கு டெல்லி CBI சிறப்பு நீதிமன்றம் இன்று அனுமதி அளித்துள்ளது. மேலும் அவரை அக்டோபர் 30-ஆம் தேதி வரை காவலில் விசாரிக்க அமலாக்க துறைக்கு அனுமதி அளித்துள்ளது.

Trending News