பிளஸ் 2 பொதுத்தேர்வு நிறைவு: 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி எப்பொழுது?

Plus 2 General Examination Last Date: சுமார் 8 லட்சம் பேர் எழுதிய 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்றுடன் நிறைவடைந்தது. பொதுத்தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் ஏப்ரல் 21 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Apr 3, 2023, 05:26 PM IST
  • மார்ச் 13 முதல் பிளஸ் 2 மாணவி மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஆரம்பமானது.
  • சுமார் 8 லட்சத்து 36 ஆயிரத்து 593 பேர் பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுதியுள்ளனர்.
  • பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 10 முதல் ஆரம்பம்.
பிளஸ் 2 பொதுத்தேர்வு நிறைவு: 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி எப்பொழுது? title=

சென்னை: கடந்த சில வாரங்களாக தமிழ்நாட்டில் நடைபெற்றுவந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு நிறைவடைந்தது. வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான அறிவிப்பு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்டதை அடுத்து, இந்த ஆண்டு மார்ச் 13 ஆம் தேதி முதல் பிளஸ் 2 மாணவி மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஆரம்பமானது. அதில் சுமார் 8 லட்சம் மாணவி மாணவர்கள் பங்கேற்றனர். இன்று பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் முடிவடையும் நிலையில், நாளை மறுதினம் பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத்தேர்வு நிறைவு பெறுகிறது குறிப்பிடத்தக்கது. 

பிளஸ் 2 பொதுத்தேர்வு நிறைவு
கடந்த 3 வாரங்களாக நடத்தப்பட்டு வந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவு பெற்றது. இறுதி நாளில் வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல் ஆகிய பாடங்களுக்கான தேர்வுகளுடன் நிறைவு பெறுகிறது. 

மேலும் படிக்க: பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் அளித்த முக்கிய தகவல்

எத்தனை மாணவ-மாணவிகள் தேர்வை எழுதினர்?
மாணவ-மாணவிகள், மாற்றுத் திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர்கள், தனித்தேர்வர்கள் மற்றும் சிறை கைதிகள் என சுமார் 8 லட்சத்து 36 ஆயிரத்து 593 பேர் பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுதியுள்ளனர்.

- மாணவர்கள் எண்ணிக்கை -4 லட்சத்து 03 ஆயிரத்து 156 பேர்
- மாணவிகளின் எண்ணிக்கை - 4 லடசத்து 33 ஆயிரத்து 436 பேர்
- மாற்றுத் திறனாளிகள் எண்ணிக்கை - 5 ஆயிரத்து 206 பேர்
- தனித்தேர்வர்கள் எண்ணிக்கை - 23 ஆயிரத்து 747 பேர்
- மூன்றாம் பாலினத்தவர்கள் எண்ணிக்கை - 6 பேர் 
- சிறை கைதிகள் எண்ணிக்கை - 90 பேர்

இன்று பள்ளி கடைசி நாள்
பொதுத்தேர்வு முடிந்ததைத் தொடர்ந்து பெரும்பாலான பள்ளிகளில் இன்று பிரிவு உபசார விழாக்கள் நடைபெற்றன. மாணவ, மாணவிகள் உற்சாகமாக காணப்பட்டனர்.

மேலும் படிக்க: உயிருக்கு ஆபத்து! பஸ்ஸில் தொங்கியபடி பயணம் செய்யும் பள்ளிக் கல்லூரி மாணவிகள்

விடைத்தாள் திருத்தும் பணி எப்பொழுது?

பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் ஏப்ரல் 21 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதன்பிறகு மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். இறுதியாக மே 5 ஆம் தேதி தேர்வு முடிவுகளை வெளியிட பள்ளிக் கல்விதுறை முடிவு செய்துள்ளது.

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்பொழுது?
10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் ஏப்ரல் 20 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் சுமார் 10 லட்சம் மாணவ, மாணவிகள் கலந்துக்கொள்வார்கள். 

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை

- ஏப்ரல்  6 ஆம் தேதி: மொழித்தாள்

- ஏப்ரல் 10 ஆம் தேதி: ஆங்கிலம்

- ஏப்ரல் 13 ஆம் தேதி: கணிதம்

- ஏப்ரல் 15 ஆம் தேதி: விருப்ப மொழித்தாள்

- ஏப்ரல் 17 ஆம் தேதி: அறிவியல்

- ஏப்ரல் 20 ஆம் தேதி: சமூக அறிவியல்

மேலும் படிக்க: 10 ஆம் வகுப்பு மாணவர்களின் கவனித்திற்கு! இன்று முதல் ஹால் டிக்கெட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News