முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாளின் உடல் தகனம்..!

முதல்வரின் தாயார் தவுசாயம்மாள் மறைவையொட்டி, தொலைபேசியில் தொடர்புக்கொண்டு ஆறுதல் கூறிய துணைமுதல்வர் OPS நேரில் ஆறுதல் கூற சேலம் செல்கிறார்..!

Last Updated : Oct 13, 2020, 10:14 AM IST
முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாளின் உடல் தகனம்..! title=

முதல்வரின் தாயார் தவுசாயம்மாள் மறைவையொட்டி, தொலைபேசியில் தொடர்புக்கொண்டு ஆறுதல் கூறிய துணைமுதல்வர் OPS நேரில் ஆறுதல் கூற சேலம் செல்கிறார்..!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள், (வயது 93) உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். சற்று நேரத்திற்க்கு முன் சிலுவம்பாளையம் கிராமத்தில் உள்ள மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது. தனது தாயாரின் உடலுக்கு முதல்வர் இறுதிச்சடங்கு செய்தார். 

எடப்பாடி அருகே சிலுவம்பாளையம் பகுதியை சேர்ந்தவர். கருப்பக்கவுண்டர் மனைவி தவுசாயம்மாள் (வயது 93). இவருக்கு விஜயலட்சுமி (வயது 74) என்ற மகளும், கோவிந்தராஜன் (வயது 70), தமிழக முதல்வர் பழனிசாமி (வயது 67), என இரு மகன்களும் உள்ளனர். வயது மூப்பின் காரணமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த தவுசாயம்மாள், கடந்த 9 ஆம் தேதி சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று (அக்.,12) நள்ளிரவு 11:50 மணிக்கு காலமானார். தாயாரின் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த முதல்வர் பழனிசாமி உடனடியாக, சென்னையிலிருந்து கார் மூலம் சேலம் சென்றடைந்தார்.

தாயாரின் மறைவையடுத்து, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகரில் நடக்கவிருந்த ஆய்வுகள் ரத்து செய்யப்பட்டன.
முதல்வரின் தாயார் உடலுக்கு உறவினர்கள், அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் நேரில் அஞ்சலி செலுத்தினர். துணை முதல்வர் பன்னீர்செல்வம், பழனிசாமிக்கு தொலைபேசியில் தொடர்புக்கொண்டு ஆறுதல் கூறிய நிலையில், நேரில் ஆறுதல் கூற சேலம் சென்றார்.

ALSO READ | ஊழலுக்கு துணைபோகும் அரசு அதிகாரிகள் யாரும் தப்பா முடியாது: MKS

முதல்வரின் தாயார் தவுசாயம்மாள் மறைவையொட்டி, அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர். கவர்னர் பன்வாரிலால் புரோகித் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். 

DMK தலைவர் MK.ஸ்டாலின்: முதல்வரின் தாயார் மறைந்தார் என்ற துயரச்செய்தி கேட்டு மனவேதனைக்கு உள்ளானேன். அன்புமிக்க அன்னையை இழந்து வாடும் முதல்வர் மற்றும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபம், இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்: மாண்புமிகு தமிழக முதல்வர் பழனிசாமி அவர்களின் தாயார் திருமதி தவுசாயம்மாள் அவர்களின் மறைவு மன வருத்தத்தையும் மனவேதனையையும் தருகிறது. தாயாரை இழந்து வாடும் முதல்வர், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அம்மாவின் ஆன்மா நற்கதியடைய எல்லாம்வல்ல அன்னை சக்தியை பிரார்த்திக்கின்றேன்.

மேலும், தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்தனர்.

Trending News