தமிழகம் & புதுச்சேரியில் அனல் காற்று வீசும்: வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு சில மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிவ்த்துள்ளது!!

Last Updated : Apr 1, 2019, 02:48 PM IST
தமிழகம் & புதுச்சேரியில் அனல் காற்று வீசும்: வானிலை ஆய்வு மையம்!   title=

தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு சில மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிவ்த்துள்ளது!!

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 தினங்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடந்த 2 நாட்களாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இயல்பைவிட வெப்பம் அதிகமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் இன்றும் நாளையும் சென்னை, திருவள்ளுவர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல் மற்றும் மதுரை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இயல்பைவிட வெப்பம் 3 டிகிரி முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அனல் காற்று வீசும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னையைப் பொருத்தவரை வானம் தெளிவாக இருக்கும், அதிகப்பட்ச வெப்பநிலையாக 36 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலையாக 34 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

 

Trending News