தமிழகத்தின் முதல் COVID-19 நோயாளி நலம் பெற்று வீடு திரும்பினார்...?

தமிழகத்தின் தனிமைப்படுத்தப்பட்ட COVID-19 நோயாளி செவ்வாய்க்கிழமை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என்று பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குநரக மருத்துவர் குழந்தைசாமி உறுதிபடுத்தியுள்ளார்.

Last Updated : Mar 18, 2020, 11:57 AM IST
தமிழகத்தின் முதல் COVID-19 நோயாளி நலம் பெற்று வீடு திரும்பினார்...? title=

தமிழகத்தின் தனிமைப்படுத்தப்பட்ட COVID-19 நோயாளி செவ்வாய்க்கிழமை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என்று பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குநரக மருத்துவர் குழந்தைசாமி உறுதிபடுத்தியுள்ளார்.

என்றபோதிலும், நோயாளியின் தொடர்புகள் (அவரது உறவினர்கள் உட்பட) 28 நாள் காலம் முடியும் வரை தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

"24 மணிநேர இடைவெளியில் எடுக்கப்பட்ட அவரது தொடர்ச்சியான இரண்டு மாதிரிகளின் முடிவுகள் எதிர்மறையான முடிவுகளை அளித்த பின்னர், பயணிகள் மற்றும் தொடர்பு தனிமை வார்டில் இருந்து விலக்கப்பட்டுள்ளார். என்றபோதிலும் வீட்டு தனிமைப்படுத்தலின் கீழ் அவரது தொடர்புகளின் சுகாதார நிலை நிலையானது என்று தமிழக சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை செவ்வாயன்று வெளியிட்ட செய்திகுறிப்பில் குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக மார்ச் 7-ஆம் தேதி தமிழகம் தனது முதல் கொரோனா வழக்கை உறுதிசெய்தது, சமீபத்தில் ஓமானுக்கு விஜயம் செய்த 45 வயதான ஒருவர் தொற்றுநோய்க்கு காரணமான வைரஸ் SARS-CoV-2 க்கு நேர்மறை சோதனை முடிவை பெற்றார். இந்நிலையில் தற்போது அவர் நலம்பெற்று திரும்பியுள்ள நிலையில் மாநிலத்திற்கு செயலில் கொரோனா வைரஸ் வழக்குகள் ஏதும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, தமிழ்நாட்டில் ​​2,635 பயணிகள் 28 நாட்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ளனர், மேலும் 24 பேர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், இதுவரை 147 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன, அவற்றில் 95 மாதிரிகள் எதிர்மறையாக மாறியுள்ளன, 51 செயல்பாட்டில் உள்ளன. ஒரு வழக்கு மட்டுமே இதுவரை மாநிலத்தில் COVID-19 க்கு சாதகமாக பதிவாகியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலத்தில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் 1,120 படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியின் உள் மருத்துவக் கழகத்தின் இயக்குநர் டாக்டர் எஸ்.ரகுநந்தன், தம்பாரத்தில் அரசாங்கம் மற்றொரு தனிமைப்படுத்தப்பட்ட வசதியைக் கொண்டு வரவுள்ளது என்று கூறினார். இதற்காக பொறியியல் கல்லூரிகளின் விடுதி கட்டிடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

Trending News