பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 29-ம் தேதி வெளியீடு!

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் 29ம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியாகும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.  

Last Updated : Apr 26, 2019, 02:33 PM IST
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 29-ம் தேதி வெளியீடு! title=

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் 29ம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியாகும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.  

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த 19-ம் தேதி வெளியானது. தொடர்ந்து பத்தாம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியிடும் பணிகள் இறுதிகட்டத்தில் உள்ளன. இந்த் ஆண்டில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை மொத்தம் 9.97 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் கடந்த 1-ம் தேதி தொடங்கி 16-ம் தேதியுடன் முடிவடைந்தது. 

தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் தயாரிக்கும் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், வரும் 29-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது. மாணவர்கள் தாங்கள் பதிவு செய்த செல்போன் எண் மூலம் தேர்வு முடிவுகளை குறுஞ்செய்தியாக பெற்றுக்கொள்ளலாம்.

http://tnresults.nic.in என்ற தளத்திலும், தேர்வு எண், பிறந்த நாள் ஆகியவற்றை பதிவு செய்து மதிப்பெண்களை தெரிந்துகொள்ளலாம்.

Trending News