ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு குடிநீருடன் 2வது ரயில் புறப்பட்டது!

ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு 25 லட்சம் லிட்டர் குடிநீருடன் 2 வது ரயில் புறப்பட்டது!! 

Last Updated : Jul 23, 2019, 11:05 AM IST
ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு குடிநீருடன் 2வது ரயில் புறப்பட்டது! title=

ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு 25 லட்சம் லிட்டர் குடிநீருடன் 2 வது ரயில் புறப்பட்டது!! 

தமிழகத்தில் தற்போது நிலவி வரும் தண்ணீர் பஞ்சம் மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்ட நிலையில், சென்னையில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. சென்னை நகரவாசிகள் தண்ணீர் பஞ்சத்தை சமாளிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். சென்னை நகரம் கிட்டத்தட்ட 200 நாட்கள் வானம் பார்த்த பூமியாக இருப்பதாலும், வெயில் சுட்டெரிப்பதாலும் நீர் நிலைகள் வறண்டுவிட்டன. குறிப்பாக சென்னையில் முக்கிய குடிநீர் ஆதாரங்களான பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகள் வறண்டு போய்விட்டன. 

சென்னை முழுவதும் கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டு நிலவி வரும் நிலையில், பல இடங்களில் உணவகங்கள் மற்றும் ஐடி நிறுவனங்கள் முடக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளன. தமிழகத்தில் நிலவி வரும் தண்ணீர் பஞ்சத்தை போக்க அரசு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். 

இந்நிலையில், ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வர தமிழக அரசு திட்டமிட்டது. இதற்காக ரூ. 65 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் துரிதமாக நடைபெற்றன. இதை தொடர்ந்து கடந்த 12 ஆம் தேதி  25 லட்சம் லிட்டர் தண்ணீர் ரயில் மூலம் சென்னைக்கு கொண்டுவரப்பட்டது. 

இந்நிலையில், இன்று 50 வேகன் கொண்ட 2வது நீர்கலன் ரயில் 25 லட்சம் குடிநீருடன் ஜோலர்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து வில்லிவாக்கம் புறப்பட்டது. ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு இதுவரை தினமும் ஒரு ரயில் மூலம் மட்டுமே குடிநீர் கொண்டு வரப்பட்டு வந்தது. இனிமேல் தினமும் 2 ரயில்களில் சென்னைக்கு குடிநீர் கொண்டு வரப்படும் என என தமிழக அரசு அறிவித்துள்ளது.

 

Trending News