The bitter truth: மனிதர்களிடம் இருந்து சிங்கத்துக்கு கொரோனா பரவியதா?

மனிதர்களிடம் இருந்து சிங்கத்துக்கு கொரோனா பரவியதா? சாத்தியமே என ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. வெளவாலில் இருந்து கொரோனா தோன்றியதாக முன்பு நம்பப்பட்டது

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jun 18, 2021, 08:34 PM IST
  • மனிதர்களிடம் இருந்து சிங்கத்துக்கு கொரோனா பரவியதா?
  • சாத்தியங்கள் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது
  • வெளவாலில் இருந்து கொரோனா தோன்றியதாக முன்பு நம்பப்பட்டது
The bitter truth: மனிதர்களிடம் இருந்து சிங்கத்துக்கு கொரோனா பரவியதா? title=

சென்னை: சென்னை மிருகக்காட்சிசாலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிங்கங்களுக்கு கொரோனா வைரஸ் மனிதர்கள் மூலமே பரவியிருக்கலாம் என ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன.
முதலில் ஒரு சிங்கத்துக்கு மனிதர்களிடமிருந்து COVID-19 பரவியிருக்கும். ஒன்றிலிருந்து பிற சிங்கங்களுக்கு தொற்று பரவியிருக்கும் என்று அஞ்சப்படுகிறது

சென்னை உயிரியல் பூங்காவில் COVID-19 நோயால் பாதித்த சிங்கங்களின் ஜீனோம் வரிசைமுறை முடிவுகளின்படி (Genome sequencing results), நான்கு மாதிரிகள் வைரஸின் ‘டெல்டா’ வகைகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. உலக சுகாதார அமைப்பின் (World Health Organization (WHO) கருத்துப்படி, இந்த மாறுபாடு அதிக பரவுதலையும், குறைக்கப்பட்ட நடுநிலைப்படுத்தலையும் (ஆன்டிபாடிகளால்) காட்டியது.

இந்த மாறுபாடு முதன்முதலில் இந்தியாவில் 2020 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் கண்டறியப்பட்டதாகக் கூறப்படுகிறது. SARS-CoV-2 (தொற்று) இன் மாறுபாடுகள் உலகம் முழுவதும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.

Also Read | COVID-19 Death: அண்ணா உயிரியல் பூங்காவில் கொரோனாவுக்கு 2வது சிங்கம் பலி

சென்னை உயிரியல் பூங்கா சிங்கங்களிலிருந்து 11 மாதிரிகள் இரண்டு தொகுதிகளாக சோதனைக்கு அனுப்பப்பட்டன. போபாலின் ஐ.சி.ஏ.ஆர்-நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஹை செக்யூரிட்டி விலங்கு நோய்கள் (ICAR-National Institute of High Security Animal Diseases) நிலையத்திற்குக் மே 24ம் தேதியன்று நான்கு மாதிரிகள் மற்றும் மே 29 அன்று ஏழு மாதிரிகள் அனுப்பப்பட்டன. மொத்தம் 11 மாதிரிகளில், ஒன்பது மாதிரிகளில் கொரோனா வைரஸ் மாதிரி இருப்பது தெரியவந்தது. உடனே சென்னை மிருககாட்சிச்சாலையில் உள்ள சிங்கங்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.  

"போபாலின் NIHSAD இல் 4 மாதிரிகளின் மரபணு வரிசைப்படுத்தல் செய்யப்பட்டது. அவை பாங்கோலின் பரம்பரை B.1.617.2 ஐச் சேர்ந்தவை என்பதையும் அவை WHO பெயரிடலின் படி டெல்டா வகைகளாக இருப்பதையும் காட்டுகிறது” என்று ICAR-NIHSAD இயக்குனர் கூறினார்.

சென்னை அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்காவில் இருந்த 15 சிங்கங்களில் இரண்டு சிங்கங்கள் கோவிட் -19 நோயால் காலமாகின. மீதமுள்ள பதின்மூன்று சிங்கங்களில் எட்டு சிங்கங்களுக்கு கோவிட் பாதிப்பு உள்ளது. அவற்றுக்கு சிகிச்சை அளிக்கப்படுகின்றன.  

Also Read | Corona Third Wave: காற்றுக்கு பிறகு நீரிலும் கொரோனா! மூன்றாம் அலை தண்ணீர் மூலமா?

உயிரியல் பூங்காவில் 53 வெவ்வேறு விலங்குகளின் வெப்பநிலை சோதனைகள், உணவு முறைகள் மற்றும் உணவுத் தகவல்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன. சில புலிகள் பசியின்மை சிக்கல்களைக் காட்டின, ஆனால் மாட்டிறைச்சிக்கு பதிலாக அவற்றுக்கு கோழி இறைச்சி கொடுக்கப்பட்டதும் உணவு உண்ணத் தொடங்கிவிட்டன” என்று AAZP இன் துணை இயக்குநர் நாகா சதீஷ் கிடிஜலா தெரிவித்தார்.

பாதுகாப்பாக உயிரியல் பூங்காவில் இருக்கும் விலங்குகளுக்கு எவ்வாறு வைரஸ் தொற்று ஏற்பட்டது என்ற மர்மம் தீர்க்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது மனிதர்களிடம் இருந்தே விலங்குகளுக்கு பரவியிருக்கலாம் என்ற தகவல்கள் கொரோனா தொடர்பான அச்சங்களை அதிகரிக்கின்றன.

விலங்கு பராமரிப்பாளர்கள் பிபிஇ கவசங்களை அணிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றியே அவற்றை நெருங்குகிறார்கள், தீவனங்களை கொடுக்கிறார்கள் என்றாலும், மனிதர்களிடம் இருந்து விலங்குகளுக்கு வைரஸ் பரவியுள்ளது.

Read Also: கொரோனா மூன்றாவது அலையிலிருந்து பாதுகாக்கும் உணவுகள்

விலங்கு-மனித பரவலுக்கான சாத்தியக்கூறுகளையும் நிராகரிக்க முடியாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர் உணர்ந்தார்கள். தற்போதுள்ள தகவல்களை மேற்கோள் காட்டி, முதலில் வெளவால்களிடமிருந்து கொரோனா உருவானது என்று சொல்லப்பட்டதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.  

AAZP அதிகாரிகள் விலங்குகளுக்கு சிகிச்சையளித்து வருகிறார்கள். அதோடு, தமிழக கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தின் (Tamil Nadu Veterinary and Animal Sciences University), ஹைதராபாத் மிருகக்காட்சிசாலையின் கால்நடை மருத்துவர்கள் மற்றும் பிராங்க்ஸ் மிருகக்காட்சிசாலையின் நிபுணர்களுடன் கலந்தாலோசித்து அறிஞர் அண்ணா பூங்கா நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. 

Read Also | Effect of Third Wave: மூன்றாவது அலை; குழந்தைகளை எவ்வாறு பாதிக்கும்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News