காவல்துறை அதிகாரிகளுக்கு கொரோனா...; திருப்பத்தூரின் இரு காவல்நிலையங்கள் மூடல்!

திருப்பத்தூருக்கு இடமாற்றம் செய்யப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை ஆடுத்து திருப்பத்தூரின் இரண்டு காவல்நிலையங்கள் மூடப்பட்டுள்ளது.

Last Updated : Jun 17, 2020, 08:15 PM IST
காவல்துறை அதிகாரிகளுக்கு கொரோனா...; திருப்பத்தூரின் இரு காவல்நிலையங்கள் மூடல்! title=

திருப்பத்தூருக்கு இடமாற்றம் செய்யப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை ஆடுத்து திருப்பத்தூரின் இரண்டு காவல்நிலையங்கள் மூடப்பட்டுள்ளது.

சப்-இன்ஸ்பெக்டர் பதவியில் உள்ள அந்த காவல்துறை அதிகாரிகள் திருப்பதூர் தாலுகா மற்றும் ஜோலர்பேட்டை காவல் நிலையங்களுடன் இணைக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் 15 நாள் ‘இன்-சர்வீஸ் பயிற்சி’ முடித்த பின்னர் அவர்கள் மூன்று நாட்களுக்கு முன்பு பணியில் சேர்ந்தனர். இந்நிலையில் பணியில் சேர்ந்த காவல்துறை அதிகாரிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இரண்டு காவல்நிலையங்களும் மூடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மூத்த அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில்., "சப்-இன்ஸ்பெக்டர்கள் இருவரும் சென்னையிலிருந்து இடம் மாற்றம் செய்யப்பட்டவர்கள். திருப்பத்தூர் தாலுகா மற்றும் ஜோலர்பேட்டை காவல் நிலையங்களில் கடமைக்கு அறிக்கை செய்வதற்கு முன்பு அவர்கள் 15 நாள் பயிற்சியை முடித்திருந்தனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தகவல்கள் படி அதிகாரிகளின் அவர்களின் மாதிரிகள் வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் ஜூன் 10 அன்று எடுக்கப்பட்டது எனவும், முடிவுகள் புதன்கிழமை அன்றே பெறப்பட்டது எனவும் தெரிகிறது.

இந்த இடைப்பட்ட காலத்தில் SI-க்கள் இருவரும் பல சகாக்களுடன் தொடர்பு கொண்டு வந்திருக்க வேண்டும் என்பதால், திருப்பதூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் உள்ள காவல்துறை அதிகாரிகளிடையே மிகுந்த சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

அதிகாரிகளின் சோதனை முடிவுகளைத் தொடர்ந்து, திருப்பதூர் தாலுகா மற்றும் ஜோலர்பேட்டை காவல் நிலையங்கள் மூடப்பட்டு, அருகிலுள்ள வசதிகளுக்கு பணியாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.

“திருப்பதூர் தாலுகா காவல் நிலையத்தில் இணைக்கப்பட்ட 46 பேர் திருமண மண்டபம் சுந்தரம் மஹால் நகருக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஜோலர்பேட்டை நிலையத்தைச் சேர்ந்த நாற்பது பேர் சாந்தைகோடியூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்” என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காவல் நிலைய கட்டிடங்கள் மற்றும் வளாகங்கள் கிருமி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக திருப்பத்தூர் மாவட்டத்தில், ஒரு பெண் இன்ஸ்பெக்டர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு நலம் பெற்றார். அவர் வனியாம்படி காவல் நிலையத்தில் இணைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News