சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ், பல்வேறு துறையில் பல புதிய அறிவிப்புகள்!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று சட்டப்பேரவையில் தமிழக சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பள்ளிக்கல்வி ஆகிய துறைகளில் செயல்படுத்தப்படவுள்ள புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார். 

Last Updated : Mar 20, 2020, 06:06 PM IST
சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ், பல்வேறு துறையில் பல புதிய அறிவிப்புகள்! title=

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று சட்டப்பேரவையில் தமிழக சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பள்ளிக்கல்வி ஆகிய துறைகளில் செயல்படுத்தப்படவுள்ள புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார். 

அந்த வகையில் சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளின் தொகுப்பு கீழே அளிக்கப்பட்டுள்ளது

---கூட்டுறவு துறை---

  • ரூ.9.66 கோடியில் மக்களின் குடியிருப்புகளுக்கு அருகிலேயே அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்க 3,501 நகரும் நியாய விலைக்கடைகள் ரூ.9.66 கோடியில் துவக்கப்படும். 
  • 105 கூட்டுறவு கடன் நிறுவனங்களுக்கு ரூ.27.74 கோடியில் சொந்த அலுவலக கட்டடங்கள் கட்டப்படும்.
  • நவீன வங்கி சேவையை வாடிக்கையாளர்களுக்கு வழங்க, 95 கூட்டுறவு நிறுவனங்கள் ரூ.14.75 கோடியில் நவீனமயமாக்கப்படும். 
  • சேலம் - மஞ்சக்குட்டை ஊராட்சி, செம்மடுவு கிராமத்தில் ரூ.15.85 கோடியில் மாநில அளவிலான புதிய கூட்டுறவு பயிற்சி நிலையம் அமைக்கப்படும். 
  • புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு புதிய தலைமை அலுவலகக கட்டடங்களும், மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகத்தில் நவீன வசதிகளுடன் கூடிய கூடுதல் கட்டடமும் ரூ.17.87 கோடி மதிப்பில் கட்டப்படும்.

---உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு---

  • அம்மா சிறு கூட்டுறவு சிறப்பங்காடிகள் மக்களின் வரவேற்பினை பெரியளவில் பெற்றுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் 189 அங்காடிகள் கூடுதலாக துவங்கப்படும்.
  • நெல் உலர்களன் வசதி, நவீன நெல் சேமிப்பு கொள்கலன் வசதிகளுடன் கூடிய நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தமிழகம் முழுவதும் 50 இடங்களில் ரூ.70 கோடி மதிப்பில் கட்டப்படும்.
  • சென்னை IIT-யின் ஆலோசனை மற்றும் தொழில்நுட்பத்துடன் 1 லட்சம் மெ.டன் கொள்ளளவு கொண்ட புதிய நவீன சேமிப்பு கிடங்குகள் ரூ.100 கோடியில் கட்டப்படும். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கு வளாகங்களில் சேதமடைந்த சாலைகள் ரூ.120 கோடியில் கான்கிரீட் சாலைகளாக அமைக்கப்படும். 
  • வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கடலூர் மாவட்டங்களில் 75000 மெ.டன் கொள்ளளவு கொண்ட நவீன விஞ்ஞான தொழில்நுட்பத்துடன் கூடிய நெல் சேமிப்பு கொள்கலன்கள் ரூ.225 கோடி மதிப்பில் அமைக்கப்படும்.

---மீன்வளம்---

  • கன்னியாகுமரி - தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் முதற்கட்டமாக கூடுதல் கட்டமைப்பு வசதிகள் ரூ.60 கோடியிலும், ஹெலன் நகர், ராஜாக்க மங்களம் மற்றும் கொட்டில்பாடு கிராமங்களில் மீன் இறங்கு தளங்கள் ரூ.39.90 கோடி மதிப்பிலும் அமைக்கப்படும்.
  • பழவேற்காடு ஏரியின் முகத்துவாரம் இயற்கை காரணங்களால் மூடாதவாறு இருக்க ரூ.27 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
  • தூத்துக்குடி மாவட்ட மீன்பிடி துறைமுகத்தின் படகு அணையும் தளத்தை ரூ.25 கோடியில் நீட்டித்து கூடுதல் படகுகள் நிறுத்த வசதி ஏற்படுத்தப்படும்.
  • ராமநாதபுரம் - மண்டபம் (வடக்கு) (தெற்கு) கிராமங்களில் ரூ.20 கோடியில் மீன் இறங்கு தளங்கள் அமைக்கப்படும். காஞ்சிபுரம் - புது குப்பம், உய்யாலி குப்பம் கிராமங்களில் ரூ.17 கோடியில் மீன் இறங்குதளம் அமைக்கப்படும்.
  • கடலூர் - அன்னன்கோயில், புதுக்குப்பம் கிராமங்களில் உள்ள மீன் இறங்குதளங்கள் ரூ.10 கோடியில் புனரமைக்கப்படும். முடசலோடை கிராமத்தில் மீன் இறங்குதளம் கூடுதல் படகுகள் நிறுத்துவதற்கு ஏதுவாக ரூ.9.50 கோடியில் நீட்டிக்கப்படும்.

---கால்நடை பராமரிப்பு---

  • கிராமப்புறங்களில் நாட்டுக்கோழி வளர்ப்பை வணிக ரீதியில் மேற்கொள்ளும் 1,925 பயனாளிகளுக்கு 50% மானியத்தில் தலா 1000 கோழிக் குஞ்சுகள், ஒரு மாதத்திற்கான கோழித் தீவனம் மற்றும் குஞ்சு பொரிப்பகம் அமைத்துக் கொடுக்க ரூ.14.73 கோடி வழங்கப்படும். 
  • ரூ.1.60 கோடியில் 40 புதிய கால்நடை கிளை நிலையங்கள் தோற்றுவிக்கப்படும்.  ரூ.3.50 கோடியில் 25 கிளை நிலையங்கள், கால்நடை மருந்தகங்களாகவும், ரூ.3 கோடியில் 5 கால்நடை மருந்தகங்கள் கால்நடை மருத்துவமனைகளாகவும், ரூ.1.20 கோடியில் நாகர்கோவில் கால்நடை மருத்துவமனை, 24 மணி நேரமும் செயல்படும் முதல்தர சேவைகள் வழங்கும் கால்நடை பன்முக மருத்துவமனையாகவும் தரம் உயர்த்தப்படும்.
  • 90.35 லட்சம் கால்நடைகளுக்கு ரூ.22.03 கோடியில் கோமாரி நோய் தடுப்பூசி போடப்படும். ராணிப்பேட்டை கால்நடை நோய் தடுப்பு மருந்து நிலையத்தில் உள்ள ஆட்டம்மை தடுப்பூசி மருந்து உற்பத்திப் பிரிவு ரூ.18.03 கோடியில் நல் உற்பத்தி நடைமுறைகள் (GMP) தரத்திற்கு தரம் உயர்த்தப்படும்.
  • தேனி மாவட்டத்தில் ஒரு புதிய கால்நடை மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும்.

---பள்ளிகல்வி துறை---

  • உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை விகிதத்தை மேலும் உயர்த்தவும், கிராமப்புற மாணவர்கள் பயன்பெறவும், உயர்கல்வித் துறை மூலம் 7 புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்படும். வரும் கல்வி ஆண்டு முதல் இக்கல்லூரிகள் செயல்படும்.

Trending News