விஜயகாந்த் - சரத்குமார் இன்று திடீர் சந்திப்பு!!

தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது சாலிகிராமம் இல்லத்தில் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் இன்று சந்தித்தார். 

Last Updated : Mar 3, 2019, 12:45 PM IST
விஜயகாந்த் - சரத்குமார் இன்று திடீர் சந்திப்பு!! title=

தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது சாலிகிராமம் இல்லத்தில் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் இன்று சந்தித்தார். 

லோக்சபா தேர்தலில் அதிமுக, பாமக, பாஜக, புதிய தமிழகம், என்.ஆர்.காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன. அதிமுகவுடனான கூட்டணி குறித்து தேமுதிக இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.

இதுவரை கூட்டணிக் கட்சிகளுக்கு தமிழகம், புதுச்சேரியில் 14 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மற்ற 26 தொகுதிகளில் 4 அல்லது 5 தொகுதிகளை தேமுதிகவுக்கு ஒதுக்கி, அத்துடன் ஒரு மாநிலங்களவை தொகுதியையும் அளிக்க அதிமுக திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இதற்கான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்நிலையில் சென்னை சாலிகிராமத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் இல்லத்துக்கு நேரில் சென்ற சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், விஜயகாந்தை சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.

 

 

Trending News