காதலி பேசாத அதிர்ச்சியில் தற்கொலை செய்துகொண்ட இளைஞர்: சோகத்தில் குடும்பம்

Kanacheepuram: காதலி பேசாத விரக்தியில் ஒரு இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 27, 2022, 01:31 PM IST
  • குடும்பங்களுக்கு இடையில் நடந்த சண்டையால் காதலனுடன் பேசாத காதலி.
  • காதலி பேசாத விரக்தியில் தற்கொலை செய்துகொண்ட காதலன்.
  • சோகத்தில் மூழ்கிய குடும்பம்.
காதலி பேசாத அதிர்ச்சியில் தற்கொலை செய்துகொண்ட இளைஞர்: சோகத்தில் குடும்பம் title=

காதலி பேசாத விரக்தியில் டிப்ளமோ படித்த இளம் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ஒரகடம் அருகே வடக்குப்பட்டு கிராமத்தில் வசித்து வருபவர் வீரபத்திரன். இவரது மகன் அன்பு செல்வன். இவருக்கு வயது 19. இவர் டிப்ளமோ முடித்து விட்டு வேலை தேடி வந்து உள்ளார்.

இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணை அன்புச்செல்வன் காதலித்து வந்துள்ளார். இந்த விஷயம் அந்த பெண்ணின் அண்ணனுக்கு தெரியவந்துள்ளது. இதனால் அன்புச்செல்வனுக்கும் அன்புச்செல்வனின் காதலியின் அண்ணனுக்கும் நேற்று கடுமையான சண்டை நடந்துள்ளது. 

இதனால் அன்புச்செல்வனின் அப்பா மற்றும் உறவினர்கள் காதலியின் அண்ணன் மற்றும் அவருடைய நண்பர்களை அடித்துள்ளனர். இதன் காரணமாக அன்புசெல்வனின் காதலி அவருடன் பேச மறுத்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க | ராமஜெயம் கொலை வழக்கில் 2 பேரிடம் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை! 

தன் காதலி தன்னோடு பேசாத ஒரே காரணத்திற்காக விரக்தியடைந்து அன்புச்செல்வன் வீட்டில் வைத்திருந்த கொக்கு மருந்தை சர்க்கரை கலந்து குடித்து மயக்கம் அடைந்துள்ளார்.

 இதனைப் பார்த்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அன்புச்செல்வனை மீட்டு காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர். 

அங்கு சிகிச்சை பெற்று வந்த அன்புச்செல்வன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தகவல் அறிந்து சென்ற ஒரகடம் காவல்துறையினர், அன்புச்செல்வனின் சடலத்தை மீட்டு உடற்கூர் ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

காதலி பேசாத விரக்தியில் ஒரு இளைஞர் இப்படி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் இளைஞரின் குடும்பத்தையும் அவரது காதலியையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 

பிரச்சனை இல்லாத மனிதன் என உலகில் யாரும் இல்லை. பிரச்சனைகள் வரும்போது அவற்றை தீர்க்க வழிகாண வெண்டுமே தவிர, நம்மை தோர்த்துக்கொள்ள நினைக்கக்கூடாது. எந்த பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது!!

உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற கீழ்காணும் எண்ணை தொடர்பு கொள்ளவும். மாநில உதவிமையம்: 104

மேலும் படிக்க | அதிமுக எம்பியின் உறவினர் மீது கொலைவெறித் தாக்குதல்! போலீசார் தீவிர விசாரணை 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News