மது போதையில் தகராறு; டாடி ஆறுமுகத்தின் மகனுக்கு போலீஸ் வலை!

புதுச்சேரியில் மது போதையில் உணவகத்தில் தகராறில் ஈடுப்பட்ட பிரபல யூட்யூப் சமையல் கலைஞர் டாடி ஆறுமுகத்தின் மகனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 23, 2021, 10:05 AM IST
மது போதையில் தகராறு; டாடி ஆறுமுகத்தின் மகனுக்கு போலீஸ் வலை! title=

புதுச்சேரியில் மது போதையில் உணவகத்தில் தகராறில் ஈடுப்பட்ட பிரபல யூட்யூப் சமையல் கலைஞரின் மகனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் அவரின் உறவினர்கள் இரண்டு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். யூட்யூபில் பிரபலமானவர் டாடி ஆறுமுகம் இவருக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் உணவகங்கள் உள்ளன. 

டாடி ஆறுமுகத்தின்  மகன் கோபிநாத், தனது சித்தப்பா மகன் ஜெயராம் நண்பர்கள் தாமு மற்றும் ஒருவருடன் புதுச்சேரியில் உள்ள தனியார் நட்சத்திர உணவக விடுதியில் (pub)மது அருந்தி உள்ளார். அப்போது அங்கு பணிபுரியும்  ஊழியர்களை தகாத  வார்த்தைகளால் திட்டி வந்துள்ளதாக கூறப்படுகின்றது. 

ALSO READ  | சிறுமியை சீரழித்த கொடூரனுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை!

மது அருந்தும் நேரம் முடிந்த பின்னரும் மது வழங்குமாறு கேட்டதாகவும், அதற்கு அங்கு பணியில் இருந்த ஜார்ஜ் சினாஸ் என்ற ஊழியர் 11 மணிக்கு மேல் மது விற்பதற்கு அனுமதி இல்லை என்று தெரிவித்ததை அடுத்து ஆத்திரமடைந்தவர்கள் ஜார்ஜிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை பீர் பாட்டிலால் தாக்கி மது அருந்தும் இடத்தில் உள்ள அனைத்து பொருட்களையும் அடித்து உடைத்து சாலைக்கு வந்து ரகளையில் ஈடுப்பட்டுள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த முத்தியால்பேட்டை போலீசார் அவர்களை காவல் நிலையம் அழைத்த போது  போலீசாருக்கும் மது போதையில் இருந்தவர்களுக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து போலீசார் அவர்களை கைது செய்து காவல் நிலையம் அழைத்து செல்ல முற்பட்ட போது டாடி ஆறுமுகத்தின் மகன் கோபி மற்றும் ஒருவர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

இதனை அடுத்து  அங்கிருந்த டாடி ஆறுமுகத்தின் தம்பி மகன் ஜெயராம் மற்றும் அவரது நண்பர் தாமு ஆகியோரை போலீசார் கைது செய்து ஊழியர் ஜார்ஜ் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து இருவரையும் போலீசார் சிறையில் அடைத்தனர். மேலும் குடிபோதையில் ரகளையில் ஈடுப்பட்டு  போலீசாரிடம் வாக்குவாததில் ஈடுப்பட்ட பிரபல யூட்யூப் சமையல் கலைஞர் டாடி ஆறுமுகத்தின் மகன் கோபியையும் அவரது நண்பரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ALSO READ திருமணம் செய்ய மறுத்ததால் வாலிபர் மீது ஆசிட் வீசிய பெண்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News