திருமணம் செய்ய மறுத்ததால் வாலிபர் மீது ஆசிட் வீசிய பெண்!

இரண்டு குழந்தைகளுக்கு தாயான ஒரு பெண், தன் காதலன் தன்னை திருமணம் செய்ய மறுத்ததால் அவர் மீது ஆசிட்டை வீசி பார்வையை இழக்கும் அளவிற்கு செய்துள்ளார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 21, 2021, 08:00 PM IST
திருமணம் செய்ய மறுத்ததால் வாலிபர் மீது ஆசிட் வீசிய பெண்! title=

திருவனந்தபுரம் :  பொதுவாக பெண்கள் காதலை ஏற்க மறுத்தாலோ, அல்லது விரும்பியவரை திருமணம் செய்து கொள்ள மறுத்தாலோ ஆண்கள் உணரவசப்பட்டு அவர்கள் மீது ஆசிட்டை வீசி உயிர் சேதத்தை ஏற்படுத்திய செய்தியை தான் நாம் அதிகளவில் கேள்விப்பட்டிருப்போம், படித்திருப்போம்.   ஆனால் இங்கு இரண்டு குழந்தைகளுக்கு தாயான ஒரு பெண், தன் காதலன் தன்னை திருமணம் செய்ய மறுத்ததால் அவர் மீது ஆசிட்டை வீசி பார்வையை இழக்கும் அளவிற்கு செய்துள்ளார்.  இந்த நிகழ்வு அங்குள்ள CCTV-யில் பதிவானதை அடுத்து இந்த கொடூர நிகழ்வு தற்போது அம்பலமாகியுள்ளது.

ALSO READ காதலன் பேசவில்லை என்று காவல்துறைக்கு போன் செய்த பெண்! சேர்த்து வைத்த காவல்துறை!

திருவனந்தபுரம் மாவட்டம், பூஜாப்புரா பகுதியில் வசித்து வருபவர் அருண்குமார்(27).  இவருக்கு ஷீபா(35) என்ற பெண்ணுடன் சமூக வலைத்தளத்தில் பழக்கம் ஏற்பட்டுள்ளது.  இவர்களது இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.  இருவரும் நன்றாக பழகி கொண்டிருந்த நிலையில் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளனர்.  இந்நிலையில் ஷீபாவிற்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பது அருண்குமாருக்கு தெரிய வந்தது.  அதனையடுத்து அவர் ஷீபாவிடம் பேசுவதை தவிர்த்ததோடு உறவை முறித்து கொண்டுள்ளார். பின்னர் இவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்து கொள்ள ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது.  தன்னை திருமணம் செய்துகொள்ள போகிறான் என்று ஆசையில் இருந்த ஷீபாவிற்கு இந்த செய்தி அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியது.

acid

இந்நிலையில் கடந்த 16-ம் தேதியன்று ஷீபா, அருண்குமாரை தொடர்புகொண்டு உன்னை சந்திக்க வேண்டும், என்று சென்டிமெண்டாக கூறி அடிமலியில் உள்ள செயின்ட் ஆண்டனி தேவாலயம் அருகே உள்ள இரும்புப்பாலத்திடம் வர சொல்லி அழைத்திருக்கிறார்.  இதனையடுத்து அருண்குமாரும் அவர் அழைப்பை ஏற்று அந்த இடத்திற்கு வந்துள்ளார்.  இருவரும் பேசிக்கொண்டு சிறிது தூரம் நடந்து கொண்டிருந்த நிலையில், ஷீபா மறுபடியும் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு, அருண்குமாரிடம் கேட்டுள்ளார்.  அவர் அதனை மறுக்கவே, சற்றும் எதிர்பாராத விதமாக தான் கொண்டு வந்திருந்த ஆசிட்டை எடுத்து வேகமாக அருண்குமாரின் முகத்தில் வீசியுள்ளார். 

இந்த நிகழ்வுகள் அனைத்தும் அங்குள்ள CCTV-யில் பதிவாகியிருந்தது.  இதனை அடிப்படையாக வைத்து அந்த பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  ஆசிட் வீச்சுக்கு உள்ளாக்கப்பட்ட அருண்குமாருக்கு கண் பார்வை பறிபோனதோடு, உடலிலும், கைகளிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.  மேலும் அவருக்கு திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ALSO READ மனைவியின் தொந்தரவால் திருமணமான 1 வாரத்தில் தற்கொலை செய்த வாலிபர்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News