BSNL பயனர்களுக்கு நல்ல செய்தி: குறைந்த விலையில் இனி அதிக நன்மைகள்

BSNL Annual Prepaid Plan Validity: சிறந்த டெலிகாம் திட்டங்கள் நமது தேவையாக உள்ளன. இதில் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ்  உடன் டேட்டா மற்றும் பல நன்மைகளும் வழங்கப்படுகின்றன. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 29, 2022, 09:47 AM IST
  • அனைவருக்கும் போனில் பேச குறைந்த விலையிலான மற்றும் சிறந்த ரீசார்ஜ் திட்டங்கள் தேவைப்படுகின்றன.
  • BSNL பயனர்களுக்கு நல்ல செய்தி.
  • பிஎஸ்என்எல் வருடாந்திர ப்ரீபெய்ட் திட்ட வேலிடிட்டி அதிகரிக்கப்பட்டுள்ளது.
BSNL பயனர்களுக்கு நல்ல செய்தி: குறைந்த விலையில் இனி அதிக நன்மைகள் title=

பிஎஸ்என்எல் வருடாந்திர ப்ரீபெய்ட் திட்ட வேலிடிட்டி அதிகரிப்பு: நமது நாட்டில் மொபைல் போன்களை பயன்படுத்தாதவர்கள் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே இருப்பார்கள். அனைவருக்கும் போனில் பேச குறைந்த விலையிலான மற்றும் சிறந்த ரீசார்ஜ் திட்டங்கள் தேவைப்படுகின்றன. 

சிறந்த டெலிகாம் திட்டங்கள் நமது தேவையாக உள்ளன. இதில் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ்  உடன் டேட்டா மற்றும் பல நன்மைகளும் வழங்கப்படுகின்றன. நீங்கள் அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல்-இன் சந்தாதாரராக இருந்தால், உங்களுக்காக ஒரு நல்ல செய்தி உள்ளது. பிஎஸ்என்எல் அதன் பிரபலமான ப்ரீபெய்ட் திட்டத்தின் பலன்களை அதிகரித்துள்ளது. இந்தத் திட்டத்தில் உள்ள மாற்றங்கள் மற்றும் அதன் நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம். 

பிஎஸ்என்எல் பயனர்களுக்கு ஒரு நல்ல செய்தி

பிஎஸ்என்எல்-இன் வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டத்தின் செல்லுபடியாகும் தன்மை அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த திட்டம் 365 நாட்கள் வேலிடிட்டியுடன் வந்த நிலையில், இப்போது பயனர்களுக்கு இதில் 60 நாட்கள் கூடுதல் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. அதாவது, இப்போது இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில், பயனர்கள் குறைந்த விலையில் 425 நாட்கள் வேலிடிட்டியைப் பெறுகிறார்கள். 

மேலும் படிக்க | ப்ரீபெய்ட் திட்டத்தில் அதிக நாட்கள் சலுகையை அதிகரித்த BSNL: சூப்பர் ஆஃபர் 

இந்த செல்லுபடியை பயன்படுத்தி கொள்ள ஜூன் வரை அவகாசம் உள்ளது. இந்தத் திட்டத்தின் விலை மற்றும் பிற நன்மைகளைப் பற்றி இங்கே காணலாம். 

பிஎஸ்என்எல்-இன் சிறந்த ப்ரீபெய்ட் திட்டம்

நாம் இந்த பதிவில் குறிப்பிட்டுள்ள பிஎஸ்என்எல்-இன் ப்ரீபெய்ட் திட்டத்தின் விலை ரூ.2,399 ஆகும். இந்த தொகையில் பயனர்களுக்கு அவர்களின் நகரம் மற்றும் உள்ளூர் சேவை பகுதியில் வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்பு வசதியும், தேசிய ரோமிங் வசதியும் வழங்கப்படுகிறது. இதில், மும்பை மற்றும் டெல்லியில் உள்ள எம்டிஎன்எல் நெட்வொர்க்கிலும் இந்த வசதி வழங்கப்படுகிறது. இந்த திட்டம் தினசரி 2ஜிபி டேட்டா மற்றும் ஒரு ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் அம்சங்களுடன் வருகிறது. தரவு முடிந்ததும், அதன் வேகம் 40Kbps ஆக குறைக்கப்படும்.

இந்த கூடுதல் பலன்கள் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும்

அழைப்பு மற்றும் டேட்டாவுடன், பிஎஸ்என்எல்-இன் இந்த ரூ.2,399 ப்ரீபெய்ட் திட்டத்தில் தனிப்பட்ட ரிங் பேக் டோன் (PRBT) அணுகல் மற்றும் 30 நாட்களுக்கு வரம்பற்ற பாடல் பரிமாற்றம் ஆகியவை கிடைக்கும். 

இந்த திட்டம் 30 நாட்களுக்கான ஈரோஸ் நவ் என்டர்டெயின்மென்ட்டின் சந்தாவுடன் வருகிறது. ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, இந்த திட்டத்தில் கூடுதல் செல்லுபடியாகும் தன்மையைப் பயன்படுத்த உங்களுக்கு ஜூன் இறுதி வரை மட்டுமே நேரம் உள்ளது.

மேலும் படிக்க | வீட்டை கண்காணிக்கும் ’மூன்றாவது கண்’ - ரூ.3 ஆயிரத்தில் சிசிடிவி 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News